Sunday 28 February 2016

5 நொடியில் படத்தை டவுன்லோடு செய்யலாம், 5ஜி சோதனையில் சாதனை.

ஸ்மார்ட்போன் பயன்பாடுகளில் உலகளவில் இரண்டாம் இடம் வகிக்கும் இந்தியாவில் இண்டர்நெட் பயன்பாடும் வேகமாக வளர்ந்து வருகின்றது. மக்கள் பயன்பாடு அதிகரிக்க துவங்கும் நிலையில் இன்னும் இண்டர்நெட் சார்ந்த டேட்டா கட்டணங்களின் விலை குறையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் நம்ம ஊர்களில் இன்னும் 3ஜி சேவையை முழுமையாக கிடைக்க பெறாத நிலையில் வெளிநாட்டில் 5ஜி சேவையை வழங்கும் சோதனை நிறைவடைந்து அவை விரைவில் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது என்ற தகவல் வெளியாகியிருக்கின்றது. 

Wn4YVLD.jpg

சோதனை 

ஆய்வு கூடங்களில் மட்டும் ஆய்வு செய்யப்பட்டு வந்த 5ஜி சேவை தற்சமயம் வெரிசான் மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்கள் தங்களது தலைமையகங்களில் சோதனை செய்ய துவங்கியுள்ளன. 

GfwMpiI.jpg

கருவி

இந்த சோதனை சாதாரண ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த முடியாது, இதற்கென பிரத்யேக கருவிகள் தற்சமயம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்கள் நம்பிக்கை அளிக்கும் விதமாக அமைந்திருக்கின்றது என கூறப்பட்டுள்ளது. 

DMJs85L.jpg

வீடியோ

சோதனைகளில் அதிக ரெசல்யூஷன் கொண்ட 4கே வீடியோக்களை எவ்வித சிரமமும் இன்றி பார்க்க முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

LRDV81o.jpg

இடையூறு

5ஜி சோதனையில் அதிவேக இண்டர்நெட் கிடைத்தாலும் திடீரென வேகம் குறைந்து கனெக்ஷனில் இடையூறு ஏற்படுவதாகவும் கூறப்படுகின்றது. 

FVcxAyx.jpg

சோதனை

தற்சமயம் பலகட்ட சோதனைகளை செய்து வரும் வெரிசான் நிறுவனம் 5ஜி சேவையை 2017 ஆம் ஆண்டில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 

1lbzxGG.jpg

வேகம்

4ஜி சேவையில் ஒரு திரைப்படத்தை பதிவிறக்கம் செய்ய அதிகபட்சம் 8 நிமிடங்கள் வரை ஆகும் நிலையில் சீரான 5ஜி கனெக்ஷனில் நொடிகளில் திரைப்படத்தை பதிவிறக்கம் செய்திட முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

mzwEkzG.jpg

சர்ரே பல்கலைக்கழகம்

5ஜி சேவைக்கான ஆய்வுகள் 2011 ஆம் ஆண்டு சர்ரே பல்கலைக்கழகத்தில் துவங்கியது. இந்த ஆராய்ச்சிக்கு சாம்சங், புஜித்சு உள்ளிட்ட நிறுவனங்கள் ஆதரவளித்து வருகின்றதும் குறிப்பிடத்தக்கது. 

o980apo.jpg

நிறுவனங்கள் 

5ஜி சேவையை வழங்க டொகோமோ, AT&T, NTT, எரிக்சன், ஹூவாய் உள்ளிட்ட நிறுவனங்கள் தற்சமயம் ஆர்வம் காட்டி வருகின்றதும் குறிப்பிடத்தக்கத்து.

கூகுள் இன்புட் டூல்ஸ் மூலம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் தமிழ் மொழியை மின்னல் வேகத்தில் தட்டச்சு செய்யலாம்

ஒரு சந்தர்பத்தில் தமிழ் மொழியை மொபைல் சாதனங்களில் பயன்படுத்துவதென்றால் எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.

ஆண்ட்ராய்டு தமிழ் தட்டச்சு

எனினும் தகவல் தொழில்நுட்பத்தின் பாரிய வளர்ச்சியின் காரணமாக அவரவருக்கு தெரிந்த மொழியில் தத்தமது சாதனங்களை பயன்படுத்திக் கொள்ளும் நிலைமை இன்று உருவாகியுள்ளது.

அந்தவகையில் தமிழ் மொழியில் கூகுள் தேடலை மேற்கொள்ளவும், தமிழ் மொழியில் குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்கள் அனுப்பவும், பேஸ்புக், கூகுள் பிளஸ், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் என எந்த ஒரு சந்தர்பத்திலும் எந்த ஒரு இடத்திலும் தமிழ் மொழியை மிக இலகுவாக பயன்படுத்திக் கொள்ள முடிகிறது.
எமது ஸ்மார்ட் போனின் திரையில் எழுதக்கூடிய தமிழ் எழுத்துக்களை டிஜிட்டல் வடிவிற்கு மாற்றித்தரும் Google Handwriting input எனும் செயலியை கூகுள் நிறுவனம் ஏற்கனவே அறிமுகப்படுத்தி இருந்தது.

இனி தமிழ் மொழியை தட்டச்சு செய்ய கூகுள் இண்டிக் கீபோர்ட் 

தற்பொழுது "கூகுள் இண்டிக் கீபோர்ட்" எனும் செயலியையும் கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியானது ஆரம்பத்தில் "கூகுள் ஹிந்தி இன்புட்" என கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து வந்தது.
இருப்பினும் இதன் அண்மைய பதிப்பில் "கூகுள் ஹிந்தி இன்புட்" எனும் பெயரை "கூகுள் இண்டிக் கீபோர்ட்" என கூகுள் நிறுவனம் மாற்றி அமைத்திருந்ததுடன் தமிழ் உட்பட இன்னும் 10 இந்திய மொழிகளையும் இதில் சேர்த்துள்ளது.
தமிழ் மொழியை தட்டச்சு செய்வதற்கு என கூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்கக்கூடிய ஏனைய செயலிகளையும் விட முற்றிலும் வேறுபட்ட இடைமுகத்தை கொண்டுள்ள இது புதிய வழியில் தமிழ் மொழியை தட்டச்சு செய்து கொள்வதற்கான வசதியை தருகிறது.

இந்த செயலியில் தமிழ் மொழியை தட்டச்சு செய்வதற்கு இரண்டு வழிமுறைகள் தரப்பட்டுள்ளன.

முறை 1:

கூகுள் இன்புட் டூல்ஸ் அப்ளிகேஷன்

ஒலிப்பு முறை எனப்படும் முறையாகும். இந்த முறையில் நீங்கள் தமிழ் மொழியை தட்டச்சு செய்யும் போது "Amma" என்ன தட்டச்சு செய்தால் "அம்மா" என்ற தமிழ் சொல்லை தட்டச்சு செய்ய முடியும்.

முறை 2:

ஆண்ட்ராய்டு தமிழ் தட்டச்சு

மற்றைய முறையானது நாம் தமிழ் எழுத்துக்களை சுட்டுவதன் மூலம் தட்டச்சு செய்யக்கூடிய பொதுவான முறையாகும். இந்த வழிமுறையில் தட்டச்சு செய்வதற்கு கூகுள் புதியதொரு இடைமுகத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த இடைமுகத்தில் தோன்றக்கூடிய எழுத்துக்கலானது இரு வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
இதன் வலது பக்கத்தில் "க, ச, த, ம, ப, ந, ர.......... " போன்ற அகர மெய் எழுத்துக்கள் தரப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு எழுத்தை நீங்கள் சுட்டும் போது அந்த எழுத்தோடு தொடர்புடைய ஏனைய எழுத்துக்கள் இடது பகுதியில் தோன்றுகின்றன.
உதாரணத்திற்கு நீங்கள் வலப்பக்கத்தில் உள்ள "க" என்பதை சுட்டும் போது Keyboard செயலியின் இடது பக்கத்தில் "க" "கா" "கீ" "கு" "கெ".... போன்ற அதனோடு தொடர்புடைய எழுத்துக்கள் தோன்றுகின்றன.

மேலும் இடப்பக்கத்தில் உள்ள தரப்பட்டுள்ள "க", "ப", "ம" போன்ற எழுத்துக்களை தொடர்ச்சியாக அழுத்தும் போது அதனோடு தொடர்புடைய மெய் எழுத்துக்களை இலகுவாக தட்டச்சு செய்து கொள்ள முடியும்.
அதாவது நீங்கள் "க" என்ற எழுத்தை தொடர்ச்சியாக அழுத்தும் போது "க்" என்ற எழுத்து தட்டச்சு செய்யப்படும். இந்த வசதியானது வேகமாக தட்டச்சு செய்ய உதவியாக அமையும்.

ஸ்மார்ட் போன் தமிழ் தட்டச்சு
மேலும் இந்த செயலியின் மேற்பகுதியில் தோன்றும் "abc" மற்றும் "அ" எனும் குறியீடுகளை சுட்டுவதன் மூலம் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் தமிழ் மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கும் மிக இலகுவாக கீபோர்டின் அமைப்பை மாற்றிக் கொள்ள முடியும்.
அத்துடன் "அ" எனும் குறியீட்டை மீண்டும் சுட்டுவதன் மூலம், மேற்குறிப்பிட்ட வகையில் தமிழ் மொழியை தட்டச்சு செய்யும் இரு வேறு வழிமுறைகளில் உங்களுக்கு இலகுவான முறையை தெரிவு செய்து கொள்ள முடியும்.
இவைகள் தவிர இந்திய ரூபாய் குறியீடு, நட்சத்திர குறியீடுகள், மற்றும் ஏனைய விசேட குறியீடுகளை பயன்படுத்துவதற்கான வசதிகளுடன் இமொஜி போன்றவற்றை பயன்படுத்துவதற்கான வசதியும் இதில் தரப்பட்டுள்ளது.

கூகுள் இண்டிக் கீபோர்ட் செயலியை நிறுவுவது எப்படி?

கீழே தரப்பட்டுள்ள இணைப்பு மூலம் இந்த செயலியை தரவிறக்கி உங்கள்  ஆண்ட்ராய்டு  ஸ்மார்ட் போனில் நிறுவிக் கொள்ளுங்கள்.

Tamil google input tools
பின்னர் நிறுவப்பட்ட கூகுள் இண்டிக் கீபோர்ட் செயலியை திறந்து கொள்க.
இனி Select Google Indic Keyboard என்பதை சுட்டுவதன் மூலம் English & Indic Languages என்பதை சுட்டுக.

கூகுள் இன்புட் டூல்ஸ் Application
பின் Select Languages என்பதை சுட்டுவதன் மூலம் தமிழ் மொழியை தெரிவு செய்க.

ஆண்ட்ராய்டு கூகுள் இன்புட் டூல்ஸ்  Tamil

அவ்வளவுதான்....!

கூகுள் இண்டிக் கீபோர்ட் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து தரவிறக்க இங்கே சுட்டுக
இந்த செயலி உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் கூகுள் ப்ளே ஸ்டோரில் தமிழ் மொழியில் பின்னூட்டங்களை எழுத மறவாதீர்கள். இதன் மூலம் தமிழ் மொழிக்கு கூகுள் அதிக முக்கியத்துவத்தை கொடுக்க இடமுண்டு.

கீபோர்டை பயன்படுத்தாமல் கூகுள் தளத்தில் தமிழ் மொழியில் தகவல்களை தேடிப்பெறுவது எப்படி? (ஸ்மார்ட் போன்களுக்கு மாத்திரம்)

கூகுள் பற்றி அறியாதவர்கள் யார் தான் இருக்க முடியும். இன்றைய இணைய ஜாம்பவான் "கூகுள்" பற்றி அதிகமானவர்கள் அறிந்திருந்தாலும் கூட அதில் இருக்கக் கூடிய பல வசதிகளை நாம் இது வரை அறிந்ததில்லை.

கூகுளில் தமிழ் தட்டச்சு செய்ய

அந்த வகையில் கூகுள் தேடியந்திரத்தில் மறைத்திருக்கக் கூடிய பல வசதிகளையும் கூகுளின் யூடியூப் தளத்தில் இருக்கக் கூடிய பல வசதிகளையும் எமது முன்னைய பதிவு மூலம் பார்த்திருந்தோம்.

அதே போல் நீங்கள் கூகுள் தேடியந்திரத்தை ஸ்மார்ட் போன் மூலம் பயன்படுத்துபவர் எனின் உங்கள் தேடலை இலகு படுத்துவதற்கு இன்னும் ஒரு வசதியையும் தருகிறது கூகுள்.

அதாவது நீங்கள் உங்களது ஸ்மார்ட் சாதனத்தின் திரையில் கையால் எழுதுவதன் மூலம் கூகுள் தளத்தின் ஊடாக உங்களுக்குத் தேவையான எந்த ஒன்றையும் தேடிப் பெறுவதற்கான வசதியே அதுவாகும்.

இதில் இனிப்பான விடயம் என்னவெனில், இந்த வழிமுறையில் ஆங்கில சொற்களை மாத்திரம் அல்லது தமிழ் உட்பட எந்த ஒரு மொழியிலும் சொற்களை எழுதி தேடலை மேகொள்ள முடியும்.
நீங்களும் இந்த வசதியை செயற்படுத்திக் கொள்ள விரும்பினால் பின்வரும் வழிமுறையை பின்பற்றுக.

கூகுளில் தமிழ்
1. உங்கள் ஸ்மார்ட் போன் மூலம் www.google.com எனும் கூகுளின் முகப்புப் பக்கத்திற்கு செல்க.

ஸ்மார்ட் போனில் கூகுள் தேடியந்திர அமைப்புக்கள்
2. பின் அதன் கீழ் பகுதியில் தரப்பட்டுள்ள Settings ===> Search Settings என்பதை சுட்டுக.
3. இனி தோன்றும் பகுதியில் Handwriting என்பதற்குக் கீழ் இருக்கும் Enable என்பதை தெரிவு செய்க.

கூகுள் தேடல் அமைப்புக்கள்
4. பின்னர் Language in Google products என்பதில் தமிழ் மொழியை தெரிவு செய்க.

கூகுளில் தமிழ்

5. இறுதியாக குறிப்பிட்ட பகுதியின் கீழே தரப்பட்டிருக்கும் Save என்பதை சுட்டுக. 
அவ்வளவுதான்.
இனி கூகுளின் முகப்புப் பக்கத்துக்குச் சென்று உங்கள் ஸ்மார்ட் போனின் திரையில் கையால் எழுதுவதன் மூலம் உங்களுக்குத் தேவையானவற்றை தேடிப்பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் கூகுளின் முகப்புப் பக்கத்தின் கீழே தோன்றும் புதிய பகுதி மூலம் எழுதிய எழுத்துக்களை நீக்கிக் கொள்ளவும் Space Bar மூலம் எழுத்துக்களுக்கு இடையில் இடைவெளியை ஏற்படுத்திக் கொள்ளவும் முடியும்.

ஆண்ட்ராய்டு போனில் "ரீசைக்கிள் பின்" (Recycle Bin) பயன்படுத்துவது எப்படி?

எமது கணினியில் இருக்கக்கூடிய கோப்புக்களில் ஏராளமானவற்றை நாம் மறதியாலோ அல்லது தேவையற்றவை என கருதும் போதோ அவைகளை நீக்கி விடுவோம் அல்லவா?
இருப்பினும் அவைகள் மீண்டும் தேவைப்பட்டால் எவ்வித கவலையும் இன்றி "ரீசைக்கிள் பின்" மூலம் திரும்பப்ப் பெற்றுக்கொள்ளலாம்.
இருப்பினும் இந்த வசதி இன்று மிக வேகமாக வளர்ந்துவரும் ஸ்மார்ட் போன் துறையில் இல்லையென்றே கூற வேண்டும்.

எனவே ஆண்ட்ராய்டு சாதனங்களில் இந்த குறையை நிவர்த்தி செய்ய உதவுகின்றது "டம்ப்ஸ்டர்" எனும் செயலி (Application)



  • உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனில் இருந்து நீங்கள் நீக்கக்கூடிய புகைப்படங்கள், ஆவணங்கள், வீடியோ கோப்புக்கள் என எந்த ஒன்றையும் இந்த செயலி மூலம் மீட்டுக்கொள்ளலாம்.
  • மேலும் நீங்கள் நீக்கக் கூடிய கோப்புக்களில் எவ்வாறான கோப்புக்களை இந்த செயலி சேமிக்க வேண்டும் என்பதனையும் இதில் தெரிவு செய்யும் வசதி தரப்பட்டுள்ளது. 
உதாரணத்திற்கு புகைப்படங்களை மட்டும், அல்லது வீடியோ கோப்புக்களை மட்டும், இல்லையெனில் புகைப்படங்களையும் ஆவணங்களையும் ,மட்டும் என தெரிவு செய்யும் வசதி இதில் உண்டு.

  • அது மட்டுமல்லாது எமது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனில் இருந்து நாம் நீக்கும் செயலிகளை (Application) கூட மீள நிறுவிக்கொள்ளும் வசதி இதில் தரப்பட்டுள்ளது. 
  • மேலும் நீங்கள் நீக்கக்கூடிய கோப்புக்கள் எவ்வளவு காலத்துக்குப் பின் (1 வாரம், 1 மாதம், 3 மாதங்கள்) தானாக நீக்கப்பட வேண்டும் என்பதனையும் தெரிவு செய்து கொள்ளும் வசதி இதில் தரப்பட்டுள்ளது.

எனவே தவறுதலாக அழித்து விட்டோமே மீட்க முடியாதே என்ற கவலை இனிமேல் வேண்டாம். நீங்களும் ஆண்ட்ராய்டு பாவனையாளர் எனின் இன்றே தரவிறக்கி நிறுவிக் கொள்ளலாம்.

Dumpster Image & Video Restore
Dumpster Image & Video Restore
113,133 ratings
Offers in-app purchases
by Baloota
5,000,000 - 10,000,000 downloads
Appears in a list of Great Utilities
Install (FREE)

ஒரே நேரத்தில் 256 வரையான நபர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் எந்த ஒன்றையும் அனுப்ப முடியும்.

மாதாந்தம் 1 பில்லியன் பயனர்களைக் கொண்ட மிகப்பெரியதொரு மெசேஜிங் சேவையே வாட்ஸ்அப் சேவையாகும்.
வாட்ஸ்அப் உதவிகள்
இதனை எமது தேவைக்கு ஏற்ற விதத்தில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இதில் பல்வேறு வசதிகள் தரப்பட்டுள்ளன.
என்றாலும் நாம் அனைவரும் அனைத்து வசதிகளையும் அறிந்து வைத்துள்ளோம் என உறுதியாக கூறிவிட முடியாது.

அதேபோல் அதிகமானவர்களால் அறியப்படாத வசதியே வாட்ஸ்அப் செயலியில் தரப்பட்டுள்ள Broadcast எனும் வசதியும் ஆகும்.
இந்த வசதி மூலம் ...

ஒரே நேரத்தில் 256 வரையான நபர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் எந்த ஒன்றையும் அனுப்ப முடியும்.

பண்டிகை தினத்தின் போது அனைவருக்கும் வாழ்த்து தெரிவிப்பதற்கு, நண்பர்கள் தினத்தின் போது நண்பர்களை பாராட்டுவதற்கு, ஒரு எச்சரிக்கை செய்தியை பலருக்கு தெரிவிக்க வேண்டிய தேவைகள் உள்ள போது என பல்வேறு சந்தர்பங்களில் இந்த வசதி எமக்கு பயனளிக்கும்.

இந்த வசதியை பயன்படுத்துவது எப்படி?



1. இந்த வசதியை பயன்படுத்துவதற்கு வாட்ஸ்அப் செயலியின் வலது மேல் மூலையில் தரப்பட்டுள்ள மூன்று புள்ளிகளை கொண்ட மெனு பட்டனை சுட்ட வேண்டும்.
2. பின்னர் தோன்றும் சாளரத்தில் New Broadcast என்பதை சுட்ட வேண்டும்.
3. இனி தோன்றும் இடைமுகத்தின் மூலம் நீங்கள் செய்தியை அனுப்ப வேண்டிய நபர்களை தெரிவு செய்த பின் குறிப்பிட்ட சாளரத்தின் வலது மேல் மூலையில் தரப்பட்டுள்ள Create என்பதை அழுத்த வேண்டும்.
4. இனி நீங்கள் தெரிவு செய்த அனைத்து நண்பர்களுக்கும் ஒரே நேரத்தில் புகைப்படம், வீடியோ கோப்புக்கள், குரல் பதிவுகள் என எந்த ஒன்றையும் பகிர முடியும்.
அவ்வளவுதான்.

Sunday 7 February 2016

பில் கேட்ஸ் பற்றி சில சுவாரசியமான தகவல்கள்

ஆனா.. ஊனா... "நீ என்ன பெரிய பில் கேட்ஸ்-ஆ..?!" என்று கேட்டு ரொம்ப அசிங்கப்படுத்துகிறார்களா.?? பரவாயில்ல.. அசிங்கப்படுத்தட்டும்..! உண்மை என்னவென்றால் அசிங்கப்பட்டத்தான் பில்கேட்ஸ் ஆக முடியும்..! 

பில் கேட்ஸ் பற்றி அப்படி என்னதான் தெரியும் உங்களுக்கு..? உலகிலேயே மிகவும் பெரிய பணக்கார்காளின் பட்டியலில் எப்போதுமே முதல் இடத்தில் இருப்பவர், தொடங்கிய காலத்தில் இருந்தே நிலையான வெற்றியை பெற்று கொண்டிருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர், அவ்வளவு தானே தெரியும்..!! 

ஆனால் அவர் எப்படி 'பில் கேட்ஸ்' ஆனார் என்பது பற்றி தெரியுமா..?! 

eQ99Qao.jpg734jlIc.jpg

முதல் கம்ப்யூட்டர் ப்ரோகிராம் : 

பில் கேட்ஸ், பள்ளி மாணவராக இருக்கும்போதே ஒரு ஜென்ரல் கம்ப்யூட்டரில் தனது முதல் கம்ப்யூட்டர் ப்ரோகிராமை எழுதி அசத்தினார்..! 

Fn2Gkt9.jpg

கில்லாடி : 

பில் கேட்ஸ் கம்ப்யூட்டர் கோட் எழுதுவதில் கில்லாடி என்று தெரிய வந்ததும் அவரை ஸ்கூல் கம்ப்யூட்டர் ப்ரோகிராம்களை எழுத வைத்தது பள்ளி நிர்வாகம்..! 

7IIZmSD.jpg

வேர்ல்ட் புக் ஆஃப் என்சைக்லோபீடியா : 

பில் கேட்ஸ் தனது பள்ளிப்பருவத்திலேயே 'வேர்ல்ட் புக் ஆஃப் என்சைக்லோபீடியா'வை முழுமையாக படித்து முடிததிருந்தார். 

5Tr9Nku.jpg

சாட் பரீட்சை : 

பில் கேட்ஸ் சாட் பரீட்சையில் 1600க்கு 1590 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.

PBnqArc.jpgPBnqArc.jpg

ட்ராப் அவுட் :

பில் கேட்ஸ் ஒரு காலேஜ் ட்ராப் அவுட் ஆவார், 1975 ஆம் ஆண்டு ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் இருந்து தனது படிப்பை நிறுத்திக்கொண்டார். 

KvmckzS.jpg7NG9HqK.jpg

கைதி :

ட்ராப் அவுட் ஆன இரண்டு ஆண்டுகள் கழித்து லைசன்ஸ் இல்லாததற்கும், சிக்னலில் நிற்காமல் சென்றதுக்கும் மெக்ஸிகோ காவல் துறையினரால் கைதி செய்யப்பட்டார். 

UVCbW7a.jpg

பழக்கம் : 

பில் கேட்ஸ், ஆண்டுக்கு சுமார் 50 புத்தகங்கள் வரை படிக்கும் பழக்கம் கொண்டவர். 

uQ51wLl.jpg

பொர்ஸ்ச்சே : 

பில் கேட்ஸ், பொர்ஸ்ச்சே கார்கள் மீது மிகவும் ஆர்வம் கொண்டவர்.

Y83KNud.jpg

சொந்த விமானம் :

பில் கேட்ஸ் தனது சொந்த விமானத்திற்காக அதிகப்படியான செலவு செய்யும் பழக்கம் கொண்டவர் என்பதும், 1997-ஆம் ஆண்டில் இருந்து பில் கேட்ஸ் தனது சொந்த விமானத்தை தான் பயன்படுத்துகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

GRjwXWX.jpg

கோடக்ஸ் லீசெஸ்டர் :

விமானத்திற்கு அடுத்தப்படியாக பில் கேட்ஸ் அதிகம் செலவு செய்வது லியோனார்டோ டா வின்சியின் எழுத்துக்களில் ஒரு தொகுப்புப்பான 'கோடக்ஸ் லீசெஸ்டர்' சேகரிப்புகாக..! 

0Jz4NX2.jpg

மரபுரிமை : 

பெரிய அளவிலான சொத்துக்களை பிள்ளைகளுக்கு விட்டு செல்வதில் எந்த விதமான பயனும் இல்லை என்ற நம்பிக்கையை பின்பற்றும் பில் கேட்ஸ் அவர் தனது குழந்தைகளுக்கு மரபுரிமையாக 10 மில்லியன் டாலர்கள் சேரும்படியாக வழிவகைச் செய்துள்ளார்.

eQtHMEc.jpg

ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் : 

ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு மீது பில் கேட்ஸ் பெரிய அளவிலான ஆர்வம் கொண்டவர். 

5aborNw.jpg

மியூசிக் பேண்ட் :

பில் கேட்ஸ்க்கு மிகவும் பிடித்த மியூசிக் பேண்ட் - வீஸர். 

Iv0GFYe.jpg

குறை : 

பில் கேட்ஸ்க்கு எந்தவொரு வெளிநாட்டு மொழியும் தெரியாது, இதை ஒரு பெரும் குறையாக பில் கேட்ஸ் கருதுவதும் குறிப்பிடத்தக்கது.

உலகின் அனைத்து விஞ்ஞானிகளுக்கும் சவால் விடும் அடர்ந்த காடு..

உலகின் அனைத்து விஞ்ஞானிகளுக்கும் சவால் விடும் அடர்ந்த காடு..

உயிரியல் ஆய்வாளர்களுக்கு இன்றுவரை புதிய புதிய உயிரினங்களை வெளிக்காட்டி, அவர்கள் அறிவுக்குச் சவால் விட்டுக் கொண்டிருக்கும் மிகப் பெரிய மழைக்காடுகளில் ஒன்றுதான் போர்னியோ.



அமேசான் காடுகளைவிடப் பழமையானவை என்பதே, போர்னியோ காட்டின் பெருமைக்குச் சான்று. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குப் பிறகு காடு நிறைந்த இத்தீவு இந்தோனேசியா, மலேசியா, புருணை ஆகிய நாடுகளின் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுவிட்டது.

பல்லுயிர்ச் செழிப்புமிக்க இம்மழைக்காட்டில் காணப்படும் 222 பாலூட்டிகளில் 44 பாலூட்டிகள் ஓரிட வாழ்விகள் (Endemic). போர்னியோவைத் தவிர உலகின் வேறெந்தப் பகுதியிலும் இவற்றைக் காண முடியாது. இதுபோல் 420 வகைப் பறவைகளில் 37 வகைப் பறவைகளும், 100 நீர்நில வாழ்வன, 394 மீன் வகைகளில் 19 வகை ஓரிட வாழ்விகள். இங்குள்ள 15,000 வகைத் தாவரங்களுள் 6,000 வகைகள் இங்கு மட்டுமே காணக்கூடியவை.
ஒரு பிசின் வகை மரமொன்றில் மட்டும் ஆயிரம் வகை பூச்சியினங்கள் காணப்படுகின்றன.

உலகிலேயே நீளமான பூச்சியாகப் பதிவாகியுள்ள ‘சான் மெகாஸ்டிக்’ எனப்படும் அரை மீட்டருக்கு மேல் (56.7 செ.மீ) நீளமுள்ள குச்சிப்பூச்சி இக்காட்டில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. இக்காட்டின் தரைப் பகுதியில்தான், உலகின் மிகப் பெரிய மலரான ரஃப்ளேசியா மலர்கிறது.

தொன்மைக்காலப் பூச்சியை உண்ணும் ஒரே பாலூட்டி வகையான துபையா எனும் விலங்கும் உலகில் இங்கு மட்டுமே வாழ்கிறது. ‘பிக்மி யானை’ என்றழைக்கப்படும் உலகின் குள்ளமான யானை, இங்குதான் காணப்படுகிறது. பரிணாம வளர்ச்சியில் வௌவாலுக்கு முந்தைய இனமான ‘பறக்கும் லீமர்’ என்னும் உயிரினமும், உலகில் காணப்படும் ஒரே இடம் போர்னியோதான். போர்னியோவின் பெருமைகளைப் பட்டியலிட்டால், இடம் பத்தாது.
1950-ல் முழுவதும் காடாக இருந்த, உலகிலேயே ஏராளமான தனித்தன்மை மிக்க உயிரினங்களைக் கொண்டிருந்த போர்னியோ காடுதான் இன்றைக்கு உலகிலேயே அதிவிரைவாக, கண்மூடித்தனமாக அழிக்கப்பட்டுவருகிறது.

வளம்மிக்க இந்தக் காட்டை மரம் வெட்டும் நிறுவனங்கள் சூறையாடிவருகின்றன. பல பன்னாட்டு உணவு நிறுவனங்களுக்குத் தேவைப்படும் பாமாயில் எண்ணெய்க்காக, இக்காட்டை அழித்து பாமாயிலைத் தரும் செம்பனைத் தோட்டங்களை உருவாக்கிவருகின்றன கார்பரேட் நிறுவனங்கள்.

போர்னியோ காட்டின் கடைசி மூச்சு எப்போது நிற்கும் என்று தெரியவில்லை.

தலையணையோடு மொபைலை வைத்துக்கொண்டு தூங்குபவரா நீங்கள்.?!

தலையணையை கட்டிப்பிடித்து கொண்டு தூங்குவது என்பது மனநிலைக்கு மிகவும் நல்லது என்பது யாருக்கு தெரியுமோ தெரியாதோ கட்டிப்பிடித்து தூங்குபவர்க்கு நிச்சயம் தெரியும்; புரியும். 

 
அதே சமயம், தலையணையைப் போல உங்கள் மொபைல் போனை கட்டிப்பிடித்துக் கொண்டும், நெஞ்சில் வைத்துக்கொண்டும், தலையனைக்கு அடியில் வைத்துக் கொண்டும் தூங்குவது என்பது எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று உங்களுக்கு தெரியுமா ? 

தெரிந்து கொள்வோம் வாருங்கள்..!

3andmain-30-1454153117.jpg

புற்றுநோய் :

மொபைல் போனை அருலேயே வைத்துக் கொண்டு உறக்கம் கொள்ளும் பழக்கம் கொதிறுந்தால் புற்றுநோய் வருவதற்க்கான வாய்ப்பும் உண்டு. 

30-1454153173-4.jpg

ரேடியேஷன் :

மொபைல்போன்களில் இருந்து வெளியேறும் ரேடியேஷன் ஆனது மூளை மற்றும் பிற உடல் பாகங்களில் புற்றுநோய் வருவதற்க்கான வாய்ப்புகளை உண்டாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

30-1454153175-5.jpg

இதய பாதிப்புகள் :

மொபைல் போனிலிருந்து வெளியேறும் ரேடியேஷன் ஆனது புற்றுநோய் பாதிப்புகளை மட்டுமின்றி இதயத்தையும் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

30-1454153176-6.jpg

மார்பக புற்றுநோய் :

குறிப்பாக மார்போடும், மார்பின் அருகிலேயும் மொபைல் போன்களை வைத்துக்கொண்டு தூங்கும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.

30-1454153169-1.jpg

தீ :

மொபைல் போன்களால், உங்கள் தலையணை தீப்பற்றிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. 

30-1454153170-2.jpg

ஓய்வில் பாதிப்பு :

இரவு என்பது ஓய்வு கொள்ளும் நேரம், உறக்கம் கொள்ளாமல் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் நோட்டிபிக்கேஷன்களை பார்த்துக்கொண்டே இருந்தால் உடலுக்கு தேவையான ஓய்வில் குறையும் பாதிப்பும் ஏற்படும். 

30-1454153177-7.jpg

அலாரக்கடிகாரம் :

அலாராத்திற்காக மட்டும் தான் மொபைல்போனை தலையணை அருகே வைக்கிறீர்கள் என்றால், அதற்கு பதிலாக நீங்கள் ஒரு அலாரக்கடிகாரம் வாங்கி விடுவதே நல்லது.