Sunday 12 July 2015

தவறாக மெயில சென்ட் பண்ணிட்டா? கவலை வேண்டாம் ஜிமெயிலில் புதிய சேவை அறிமுகம்

இதுவரை மின்னஞ்சல் சேவை நிறுவனங்களில் இல்லாத ஒரு வசதியை ஜிமெயில் இன்று அறிமுகம் செய்துள்ளது.



அதாவது, ஜிமெயிலில் தவறுதலாக மெயிலை அனுப்பிவிட்ட பிறகு, 30 நொடிக்குள் அதனை ரீ சென்ட் என்னும் ஆப்ஷன் மூலமாக திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த வசதியை ஒவ்வொருவரும் ஜிமெயில் செட்டிங்கில் சென்று லேப்ஸ் ஆப்ஷனில் அன்டூ சென்ட் என்ற பிரிவில் அன்டூ என்ற சேவையை எனேபல் செய்து கொள்ள வேண்டும். பிறகு அந்த மாற்றத்தை சேவ் செய்துவிட்டு வரவேண்டும்.

இதன்பிறகு, நீங்கள் ஒவ்வொரு மெயிலையும் அனுப்பிய பிறகு ஒரு ஆப்ஷன் வரும். அதில், அனுப்பிய மெயிலை திரும்பப் பெற வேண்டும் என்றால் அன்சென்ட் என்ற ஆப்ஷனை க்ளிக்கினால் போதும், உங்கள் மெயில் ரிட்டர்ன் வந்து விடும்.