Tuesday 18 October 2016

'கூகுள் போட்டோஸ்' தரும் கூடுதல் வசதிகள்

ஸ்மார்ட் போன் பயன்பாடுகளில் அதிகம் மேற்கொள்ளப்படுவது போட்டோ மற்றும் விடியோ எடுக்கும் செயல்பாடுகள் தான். இவற்றை நம் போன்களிலேயே வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தால், நம் போனில் இடம் இல்லாமல் போய்விடும். மேலும் அது தேவையும் இல்லை. இதனை உணர்ந்தே, கூகுள் நிறுவனம், ஸ்மார்ட் போன்களில் இயங்கும் வகையில், “கூகுள் போட்டோஸ்” என்ற செயலியை இலவசமாக வழங்குகிறது. 



கூகுள் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் ஓர் இலவச செயலி 'கூகுள் போட்டோஸ்'. இது ஏதோ படங்களைத் தன்னிடத்தே தேக்கி வைத்து, அவற்றை நிர்வாகம் செய்திட வழி வகுக்கும் புரோகிராமாகத்தான் நாம் பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறோம். பலர், இந்த செயலி குறித்தும் அதனைப் பயன்படுத்துவது குறித்தும் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். இந்த செயலியின் பல்வேறு பயன்பாடுகளை இங்கு காணலாம். 


கூகுள் போட்டோஸ் (Google Photos)


க்ளவ்ட் சேமிப்பு தளம், படங்களைத் தேக்கி வைக்கும் இடம் மற்றும் படங்களைப் பகிர்ந்து கொள்ள வழி வகுக்கும் ஒரு சாதனம் எனப் பன்முக பயன்களைத் தரும் ஒரு செயலியாகும். இதனால், இதனை Flickr, iCloud, Dropbox, and OneDrive ஆகிய செயலிகளுக்குப் போட்டியாகக் கூடக் கருதலாம்.  நம்முடைய ஆண்ட்ராய்ட் போன் அல்லது ஆப்பிள் போன்களிலிருந்து நம் போட்டோக்களை பேக் அப் செய்து வைக்கும் தளமாக நாம் இதனை அறிந்திருக்கிறோம். இணையத்தில் இதனை அணுகி, நம் போட்டோக்களைக் காணும் வசதியை இது தருகிறது. இதனை “high quality” (16 எம்.பி. அளவிலான போட்டோக்கள் மற்றும் ஹை டெபனிஷன் வீடியோக்கள்) என்னும் அமைப்பில் அமைத்தால், அளவற்ற எண்ணிக்கையில் போட்டோ மற்றும் விடியோ பைல்களை இதில் தேக்கி வைக்கலாம். இதற்கும் மேலான திறன் கொண்ட போட்டோ மற்றும் விடியோ பைல்கள் இருந்தால், அதற்கான இடத்தை நமக்கு கூகுள் தந்திருக்கும், கூகுள் ட்ரைவ் இடத்திலிருந்து எடுத்துக் கொள்ளும். இந்த வசதிகளைத் தவிர, வேறு சில பயன்பாடுகளையும் நாம் இதில் மேற்கொள்ளலாம். அவற்றை இங்கு காணலாம்.



ஆட்கள், இடங்கள் மற்றும் பிற தேடல்:

கூகுள் போட்டோஸ் தளம், நாம் எடுத்து இந்த தளத்திற்கு அனுப்பும் படங்களை, அவை எடுக்கப்பட்ட இடம், நாள் என்ற வகையில் தானாகவே வகைப்படுத்தி வைக்கிறது. கூகுள் ஏற்கனவே தான் கொண்டுள்ள, படங்களைப் புரிந்து கொள்ளும் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தியும், தான் ஏற்கனவே கொண்டுள்ள மிகப் பெரிய எண்ணிக்கையிலான படங்களின் அடிப்படையிலும், உங்கள் படங்களை எளிதாகப் புரிந்து கொண்டு, அவை சுட்டும் அல்லது காட்டும் பொருளை வகைப்படுத்திக் கொள்கிறது. இதனால், நாம் நம் போட்டோக்களை அவற்றின் வகைப்படி தேடி அறிய முடிகிறது. சென்ற மாதம் நாம் கலந்து கொண்ட திருமணம், விடுமுறையில் எடுத்த போட்டோ, நம் செல்லப் பிராணிகளின் படங்கள், உணவுப் பொருட்கள் எனப் பல வகைகளில் நம் படங்களைத் தேடிப் பெற முடியும். உங்கள் கூகுள் போட்டோஸ் தளத்தின் கீழாக, வலது பக்கம், உள்ள தேடலுக்கான ஐகானைத் தட்டி, கிடைக்கும் கட்டத்தில், உங்கள் தேடல் சொல்லை, எ.கா. உணவு, கார் என எது குறித்தும் டைப் செய்து, “Enter” அல்லது “Search” டேப் செய்து தேடினால், படங்கள் காட்டப்படும். தானாகக் குழுவாக அமைக்கப்பட்ட படங்கள், தேடல் கட்டத்தின் முதன்மைப் பிரிவிலேயே காட்டப்படுகின்றன. மேலாக, நாம் எடுத்த போட்டோக்களின் சில முகங்கள் காட்டப்படுவது இதன் சிறப்பு.



ஒரே மாதிரியான முகங்கள் தொகுப்பு: 


உங்களுடைய போட்டோக்களில் உள்ள முகங்களிலிருந்து, கூகுள் போட்டோஸ் மாதிரிகளை உருவாக்கி, அவற்றின் அடிப்படையில் குழுக்களை அமைக்கிறது. இவற்றின் அடிப்படையில், நாம் “Mom” என்றோ, அல்லது பெயர்களைக் கொடுத்தோ, போட்டோக்களைத் தேடலாம். இது போன்ற குழுக்களின் பெயர்கள் மற்றும் செல்லப் பெயர்கள் அனைத்தும், உங்கள் அக்கவுண்ட்டிற்கு மட்டுமே சொந்தமாக இருக்கும். மற்றவர்கள் இவற்றைப் பயன்படுத்த முடியாது. குழுக்களுக்குப் பெயர் கொடுக்க, அல்லது முகங்களின் அடிப்படையிலான பொதுப் பெயர்கள் கொடுக்க, முகக் குழு ஒன்றின் மேலாக உள்ள “Who is this?” என்பதில் டேப் செய்திடவும். இங்கு உள்ள கட்டத்தில், நீங்கள் கொடுக்க விரும்பும் பெயரினைத் தரவும். உங்கள் விருப்பம் நிறைவேற்றப்படும். இதனை நீக்க வேண்டும் என எண்ணினால், “Options” என்ற மெனுவில் டேப் செய்து, “Edit or Remove name label” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். ஒரே நபரின் படம் இரு குழுக்களில் இருந்தால், இரண்டையும் ஒன்றிணைக்கலாம். இவ்வாறு ஒரே முகத்தினை இரு குழுக்களில் கூகுள் போட்டோஸ் அமைப்பதனையும் தடை செய்திடலாம். இதற்கு “Settings” சென்று, “Group similar faces,” என்று இருப்பதன் அருகே உள்ள ஸ்விட்ச்சை இயக்காமல் வைக்கலாம்.



பேக் அப் அமைப்பை மாற்றலாம்: 

உங்களுடைய போட்டோ மற்றும் விடியோக்கள் அனைத்தும் குறிப்பிட்ட கூகுள் அக்கவுண்ட்டில் பேக் அப் செய்திடப்படும். இருப்பினும், நீங்கள் எந்த அக்கவுண்ட்டில் இவற்றை பேக் அப் செய்திட வேண்டும் என்பதனை மாற்றி அமைக்கலாம். இதற்கு கூகுள் போட்டோ தளத்தில், “Settings > Back up and sync” எனச் சென்று மாற்ற வேண்டும். அக்கவுண்ட் பெயர் இடத்தில் டேப் செய்து மாற்றலாம். Upload Size என்ற இடத்தில் டேப் செய்து “High Quality” மற்றும் “Original” என்ற தன்மையினை நிர்ணயம் செய்திடலாம். “High Quality” என்பதைத் தேர்ந்தெடுத்தால், வரையறையின்றி போட்டோக்களையும், விடியோ பைல்களையும் சேவ் செய்திடலாம். “Original” நிலை தேர்ந்தெடுத்தால், கட்டணம் எதுவும் செலுத்தாமல், 15 ஜி.பி. அளவிற்கு இவற்றைச் சேமிக்கலாம்.



வை பி அல்லது நெட்வொர்க்:

 இணைய இணைப்பு என்பது இருவகையில் மேற்கொள்ளலாம். மொபைல் போன் சேவையோடு இணைந்த டேட்டா வகை இணைப்பு மற்றும் வை பி இணைய இணைப்பு. இதில் எந்த வகையில் இருக்கும்போது, அல்லது இரண்டு வகையிலும் இருக்கையில் போட்டோக்களை தரவேற்றம் செய்திட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம். அதே போல “Back up all” என்பதைத் தேர்ந்தெடுத்தால், போட்டோ மற்றும் விடியோ என இரண்டும் பேக் அப் ஆகும். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் உங்களின் மொபைல் நெட்வொர்க் பயன்படுத்தி, இவற்றை அப்லோட் செய்தால், நெட்வொர்க் டேட்டா என அதிக செலவாகும். எனவே, வை பி மட்டும் எனத் தேர்ந்தெடுப்பதே நல்லது. இதில் While charging only என்று ஒரு ஆப்ஷன் உண்டு. இதனைத் தேர்ந்தெடுத்தால், நம் மொபைல் போன், பேட்டரியில் இயங்காமல், மின்சக்திக்கான இணைப்பில் இருக்கையில் மட்டும் நம் போட்டோக்கள் அப்லோட் செய்திடும். எனவே, விடுமுறையில் நாம் வெளியே செல்கையில், நம் பேட்டரியின் மின் சக்தி தீர்ந்துவிடுமோ என்ற பயம் தேவை இல்லை.


போட்டோக்களை அழித்துவிடலாமே:


உங்கள் மொபைலில் எடுத்த போட்டோக்களை நீங்கள் கூகுள் போட்டோஸ் அல்லது வேறு ஒரு க்ளவ்ட் ஸ்டோரேஜில் தேக்கி வைப்பதாக இருந்தால், கேமராவில் உள்ள படங்களை அழித்துவிடலாமே. கேமராவின் நினைவகம், புதியதாக எடுக்கப்படும் போட்டோக்களுக்குப் பயன்படுமே.



மற்ற செயலிகளிலில் உள்ள போட்டோக்கள்:


 கூகுள் போட்டோஸ் செயலி, அது எந்த மொபைல் போனில் இயக்கப்படுகிறதோ, அந்த மொபைல் போனில் எடுக்கப்படும் படங்களை மட்டுமே எடுத்துக் கொள்ளும். வாட்ஸ் அப் போன்ற பிற செயலிகளிலில் கிடைக்கப் பெறும் போட்டோக்களையும் இதற்கு அனுப்ப வேண்டுமாயின், அவை எங்கு ஸ்டோர் செய்யப்படுகின்றன என்பதை, கூகுள் போட்டோஸ் செயலிக்குத் தெரிவிக்க வேண்டும். இதற்கு, மெனுவில் உள்ள “Device Folders” என்பதனைக் கிளிக் செய்து, அங்கு கிடைக்கும் போல்டர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லை எனில், “Settings > Back up and sync,” எனச் சென்று, “Choose folders to back up…” என்பதில் தட்டி, பேக் அப் செய்வதற்கான போல்டர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.



காணும் தோற்றம் மாற்ற: 

படம் ஒன்றை விரல்களால் அழுத்தி இழுத்து, பெரிதாக மாற்றலாம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், கூகுள் போட்டோஸ் செயலியின் மூலம் இன்னும் சில செயல்பாடுகளையும் மேற்கொள்ளலாம். அவை, daily view, போட்டோவினை திரை முழுக்கப் பார்க்க “comfortable” view எனச் சில தோற்ற வகைகளைக் காணலாம்.


ஒரே அழுத்தத்தில் பல போட்டோக்கள் தேர்ந்தெடுத்தல்:

நூறு போட்டோக்களை உங்கள் போனில் இருந்து தேர்ந்தெடுக்க வேண்டுமாயின், நீங்கள் நூறு முறை தட்ட வேண்டியதிருக்கும். இதை கூகுள் போட்டோஸ் மூலம் தவிர்த்து, ஒரே தட்டலில் மொத்தமாகப் போட்டோக்களைத் தேர்ந்தெடுக்கலாம். தேர்ந்தெடுக்க வேண்டிய போட்டோக்களில், முதல் போட்டோவில், சில விநாடிகள் கூடுதலாக அழுத்தவும். பின்னர், விரலை எடுக்காமல், மேல் கீழாக, பக்கவாட்டில் விரலை நகர்த்தி, போட்டோக்களைத் தேர்ந்தெடுக்கவும். இணைய தளத்தில் இதனை மேற்கொள்கையில், ஷிப்ட் கீ அழுத்தியவாறு ஒரே நேரத்தில் பல போட்டோக்களைத் தேர்ந்தெடுக்கலாம்.


அழித்ததைத் திரும்பப் பெற:

சற்று வேகமாகச் செயல்படுகையில், நீங்கள் நீக்க விரும்பாத போட்டோ ஒன்றினை அழித்தால், மீண்டும் அதனைப் பெற கூகுள் போட்டோஸ் வழி தருகிறது. நீங்கள் அழித்த போட்டோக்களை, கூகுள் போட்டோஸ் செயலி, தன் ட்ரேஷ் பெட்டியில் 60 நாட்கள் வரை வைத்திருக்கும். அந்த போல்டர் சென்று, மீண்டும் தேவைப்படும் போட்டோவினை மீட்டு எடுக்கலாம். 



தரவேற்றம்:

 கூகுள் போட்டோஸ் தானாகவே, போட்டோக்களை அதன் தளத்திற்கு அப்லோட் செய்திடும். ஆனால், அது டெஸ்க்டாப் அப்லோடர்களையும் கொண்டுள்ளது. போல்டர்களை முழுமையாக இழுத்துச் சென்று, photos.google.com தளத்தில் விட்டுவிட்டால், அதில் உள்ள போட்டோக்கள் தானாக அப்லோட் செய்யப்படும். மேலே சொல்லப்பட்ட வசதிகளுடன், இன்னும் சில வசதிகளும் கூகுள் போட்டோஸ் புரோகிராமில் கிடைக்கிறது. அவை மற்ற கூகுள் செயலிகளுடன் இணைந்து செயல்படுபவை ஆகும். அவற்றின் உதவிப் பக்கங்களில் இந்த வசதிகள் குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.

ஆப்பிள் ஐபோன் IOS 10 -ல் உள்ள நன்மைகள் மற்றும் பிரச்சனைகள்

உலகளவில் ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள் நிறுவனத்திற்கென தனி இடம் உள்ள நிலையில் இந்நிறுவனம் தனது அடுத்த படைப்பை பற்றி எப்பொழுது அறிவிப்பு செய்தாலும் ஸ்மார்ட்போன் ரசிகர்களை அது ஈர்க்கும் என்பது உண்மை.

 
இதனிடையே, ஆப்பிள் ஐபோனை உபயோகப்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு தனது அடுத்த பதிப்பான IOS 10-ஐ சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

இந்த அறிவிப்பு எந்த அளவுக்கு வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்ததோ அதே அளவுக்கு இதனால் ஏற்படும் பிரச்சனைகளால் கவலையும் கொடுத்துள்ளது.இந்நிலையில் IOS 10-ல் உள்ள நன்மைகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து தற்போது பார்ப்போம்

 

நன்மைகள்:

சாதாரண ஆண்ட்ராய்டு போன்களில் ஒவ்வொரு முறையும் நாம் மொபைலை உபயோகப்படுத்திய பின்னர் லாக் செய்யவோ அல்லது அன்லாக் செய்யவோ வேண்டும். ஆனால் IOS 10 சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்தால் உங்கள் ஆப்பிள் ஐபோனில் இந்த பிரச்சனை இல்லை.

நீங்கள் ஒரே ஒரு ஸ்வைப் செய்து போனில் உள்ள எதை வேண்டுமானாலும் உடனே பார்க்கலாம். அதேபோல் லாக் செய்ய மறந்துவிட்டாலும் பரவாயில்லை. அதுவே ஆட்டோமெட்டிக்காக லாக் ஆகிவிடும். அதேபோல் ஒரே ஒரு ரைட் ஸ்வைப் செய்தால் உங்கள் ஐபோனில் வானிலை, செய்தி, இசை, போட்டோக்கள், ரிமைண்டர்கள் ஆகியவற்றை நீங்கள் பார்க்கலாம்.

ஆப்பிள் ஐபோன் உபயோகப்படுத்தும் வாடிக்கையாளர்கள் IOS 10 சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்த பின்னர் மெசேஜ்களை வேற லெவலில் அனுப்பலாம். சாதாரணமாக மெசேஜ் அனுப்பினால் ஒவ்வொன்றாக கியூவில் செல்லும். ஆனால் இதில் மொத்தமாக செல்வதுடன் ஸ்பெஷல் எபெகெட், அனிமேஷன் பேக்ரவுண்ட், இன்விசிபிள் லிங்க் உள்பட பல விஷயங்களை மெசேஜில் அனுப்பலாம்.

நீங்கள் பதிவு செய்யும் அனைத்து வகை புகைப்படங்களையும் ஏற்றுக்கொள்வதோடு, சில குறிப்பிட்ட புகைப்படங்களை தேர்வு செய்து வீடியோவாக மாற்றும் வசதியும் இதில் உண்டு. மேலும் நூற்றுக்கணக்கான புகைப்படங்களை வைத்திருக்கும் பட்சத்தில் போட்டோவை சியர்ச் செய்யும் வசதியும் இருப்பதால் மிக எளிதாக இருக்கும்.

ஆப்பிள் ஐபோன் பயன்பாட்டார்களுக்கு ஒரு வரப்பிரசாதம் போல அமைந்துள்ளது இந்த Siri ஆப். இதன் மூலம் நீங்கள் கட்டளையிட்டால் உடனடியாக வாட்ஸ் அப் மெசேஜ் மற்றும் யூபர் உள்பட பல புதியவகையான ஆப்ஸ்களை எளிதாக கையாளலாம்.

பங்குவர்த்தகம் செய்பவர்களுக்கு உதவியாக ஒருசில ஆப்கள் ஆப்பிள் ஐபோனில் டீஃபால்ட்டாக இருக்கும்



பிரச்சனைகள்:

இதுவரை நாம் பல போன்கள் அன்லாக் செய்ய ஸ்லைடுதான் பயன்படுத்தியிருப்போம். ஆப்பிள் ஐபோனை வாங்கினாலும் அன்லாக் செய்ய ஸ்லைடு செய்யத்தான் ஆட்டோமெட்டிக்காக நமது விரல் செல்லும். ஆனால் இதில் அதற்கென ஒரு பட்டன் வைத்துள்ளார். இந்து பலருக்கு பிரச்சனையாகவே உள்ளது.

இந்த போனில் உள்ள மியூசிக் ஆப்-ன் வடிவத்தை பார்த்தாலே யாருக்கும் மியூசிக் கேட்க வேண்டும் என்ற ஆசை வராது. மோசமான டிசைன் மற்றும் பெரிய பெரிய ஃபாண்ட் நம்மை எரிச்சலாக்குகிறது.

ஆப்பிள் ஐபோனின் IOS 10 சாப்ட்வேர் பல வழிகளில் பயன்பாட்டார்களுக்கு நன்மையை கொடுத்திருந்தபோதிலும் பேட்டரியின் பவரை அதிகமாக உட்கொள்வதால் பேட்டரி லைப் குறைகிறது. எனவே IOS 10.1 அப்டேட் செய்யும்போது இந்த பிரச்சனையை ஆப்பிள் நிறுவனம் சரிசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IOS 10 -ல் புதியதாக சேர்க்கப்பட்டிருக்கும் 'Raise to wake' ஆப்சன் சரியாக வேலை செய்யவில்லை என்று பலரிடம் இருந்து புகார் வந்து கொண்டிருக்கின்ரது.ஆப்பிள் ஐபோனின் IOS 10 சாப்ட்வேர் பயன்படுத்திய பலர் கூறும் இன்னொரு பிரச்சனை பிரிக்கிங் பிரச்சனை. எனவே உங்களது மொபைலை அப்டேட் செய்யும் முன்னர் பேக்கப் எடுத்து வைத்து கொள்வது புத்திசாலித்தனம் ஆகும்

Monday 17 October 2016

அனைத்து ஐபோன் புகைப்படங்களிலும் 9:41 AM எனும் நேரம் குறிக்கப்படுவது ஏன்?

இன்றைய ஸ்மார்ட்போன்களின் ராஜாவாக என்ன தான் ஆண்ட்ராய்டு இருந்தாலும், அன்று தொடக்கம் இன்று வரை ஒரு தனித்துவமான ஸ்மார்ட் போனாக ஐபோன் இருக்கிறதென்றால் அதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை.
ஐபோன் இரகசியம்
ஐபோன் அறிமுகப்படுத்தப்பட்ட காலம் தொடக்கம் இன்றுவரை ஐபோன், ஐபேட் சாதனங்களின் உத்தியோகபூர்வ புகைப்படத்தில் 9:41 AM வைக்கப்பட்டிருப்பதை அவதானித்துள்ளீர்களா?

12:00, 11:11, 10:10 என்பது போன்ற பார்க்கும்போது அழகிய தோற்றத்தை தரக்கூடிய ஒரு நேரத்தை வைக்காமல் எப்பொழுதும் 9:41 AM நேரத்தை ஆப்பிள் நிறுவனம் ஏன் வைக்கிறது என்று நீங்கள் சிந்தித்ததுண்டா?
அது ஏனோ தானோ என்று வைக்கப்பட்ட நேரம் அல்ல மாறாக ஸ்டீவ் ஜாப்ஸ் ஆல் முதன் முதலாக உலகுக்கு ஐபோன் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்ட நேரமே அதுவாகும்.

வீடியோவுக்கு ப்ரிஸ்மா தோற்றம் வழங்க உதவும் செயலி

ப்ரிஸ்மா பற்றி அறியாதவர்கள் யார் தான் இருக்க முடியும். அறிமுகப்படுத்தப்பட்டு குறுகிய காலத்திலேயே அது அதி பிரபலம் ஆகியதை நீங்கள் அறிந்திருக்கக் கூடும்.
ஆடிஸ்டோ
ப்ரிஸ்மா செயலியானது எமது புகைப்படங்களை மிக அழாகான ஓவியங்கள் போல் செதுக்கிக் கொள்ள உதவுகிறது. என்றாலும் எமது வீடியோ கோப்புக்களை அதன் மூலம் எடிட் செய்வதற்கான வசதி  இதுவரை வழங்கப்படவில்லை.


எனினும் குறையை நிவர்த்தி செய்கிறது ஆடிஸ்டோ எனும் புதிய செயலி. இதனை கூகுள் ப்ளே ஸ்டோரில்  இருந்து இலவசமாகவே தரவிறக்கிக் கொள்ளலாம்.

இது எமது வீடியோ கோப்புக்களை ஓவியம் போல் மாற்ற உதவுகிறது. பயன்படுத்துவது மிகவும் இலகு. இதனை ஐபோன்களிலும் பயன்படுத்த முடிகின்றமை குறிப்பிடத்தக்கது. இருப்பினும் 10 செக்கன்கள் நீளமுடைய வீடியோ கோப்புக்களுக்கே இது ஆதரவளிக்கிறது.

வீடியோ ஒன்றை சித்திர பாங்குக்கு மாற்றுவது எப்படி?

படி 1: முதலில் இந்த செயலியை நீங்கள் தரவிறக்கி திறந்துகொண்ட பின் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள கேமரா செயல்பட ஆரம்பிக்கும்.
ஆடிஸ்டோ செயலி

படி 2: பின்னர் குறிப்பிட்ட செயலியின் கீழ் மத்திய பகுதியில் இருக்கும் பட்டனை சுட்டுவதன் மூலம் 10 செக்கன்கள் நீளமுடைய வீடியோ ஒன்றை உங்களால் பதிவுசெய்ய முடியும்.
ஆடிஸ்டோ செயலி ஆண்ட்ராய்டு
படி 3: பின்னர் உங்களுக்கு விருப்பமான சித்திர அமைப்பொன்றை (Art Filter) தெரிவு செய்ய வேண்டும்.
ஆடிஸ்டோ செயலி ஆண்ட்ராய்டு மொபைல்
அவ்வளவு தான்!
இனி ஒருசில செக்கன்களில் நீங்கள் தெரிவு செய்த சித்திர பாங்குக்கு உங்கள் வீடியோ கோப்பு மாற்றப்பட்டு தரப்படும்.
குறிப்பு: உங்கள் இணைய வேகத்தை பொறுத்து உங்கள் வீடியோ மாற்றப்படும் நேர அளவு மாற்றமடையும்.
நீங்களும் பயன்படுத்திதான் பாருங்களேன்.

ஒரே நேரத்தில் பலருக்கு forward செய்யும் புதிய வசதி வாட்ஸ்அப் சேவையில் அறிமுகம்

வாட்ஸ்அப் பற்றி அறியாதவர்கள் யார் தான் இருக்க முடியும். வாட்ஸ்அப் சேவையானது புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அது இன்றுவரை மெசேஜிங் சேவையில் முன்னிலை வகித்து வருகிறது.
வாட்ஸ்அப்  forward
அந்தவகையில் வாட்ஸ்அப் பயனர்களை குதூகலிக்கச் செய்யும் மற்றுமொரு வசதியும் இதில் அறிமுகப்படுத்தப்பட்ட்டுள்ளது.


அதாவது வாட்ஸ்அப் மூலம் பெறப்பட்ட ஒரு செய்தியை பலருக்கு அனுப்பவேண்டிய (Forward) தேவை ஏற்பட்டால் நாம் அவற்றை தனித்தனியாகவே ஒவ்வொருவருக்கும் அனுப்பி வந்தோம் என்றாலும் இதன் பின்னர் அவ்வாறான சிரமங்கள் உங்கள் இருக்காது.
மாறாக குறிப்பிட்ட செய்தியை ஒரே நேரத்தில் பலருக்கு அனுப்பி வைக்கக்கூடிய புதிய வசதி இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை வாட்ஸ்அப் செயலியின்  2.16.230 எனும் பதிப்பில் பெற்றுக்கொள்ளலாம். இந்த பதிப்பு இதுவரை கூகுள் ப்ளே ஸ்டோரில் அறிமுகப்படுத்தப்படவில்லை. இருந்த போதிலும் இதனை கீழுள்ள  இணைப்பை பயன்படுத்தி APK மிர்ரர் தளத்தில் இருந்து இதனை தரவிறக்கிக்கொள்ளலாம்.

Thursday 1 September 2016

விண்டோஸ் 10 முதலாண்டு மேம்படுத்தல்

விண்டோஸ் 10 இயக்க முறைமை பொது மக்களுக்கு வழங்கப்பட்டு ஓராண்டாகிவிட்டது. இனி இலவசமாக விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள முடியாது. கட்டணம் செலுத்தித் தான் பெற வேண்டும். இந்த நிலையில், விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கான, பல வகை வசதி மேம்படுத்தலை, ஆகஸ்ட் 2 அன்று மைக்ரோசாப்ட் வெளியிட்டது. ஏற்கனவே, விண்டோஸ் 10 சிஸ்டத்தில் இயங்கிக் கொள்பவர்களுக்கு இது எளிதாகக் கிடைத்து. பலவகை மாற்றங்களையும், புதிய வசதிகளையும் இந்த முதலாண்டு அப்டேட் மூலம் மைக்ரோசாப்ட் தந்துள்ளது. அவற்றை இங்கு காணலாம்.

இந்த புதிய மேம்படுத்தல் தொகுப்பு “பதிப்பு 1607 (Version 1607) என அழைக்கப்படுகிறது. இந்த மேம்படுத்தலை உங்கள் கம்ப்யூட்டரில் மேற்கொள்ள, Settings > Updates & Security > Windows Update என்று செல்லவும். இந்த திரையில், Check for Updates என்பதில் கிளிக் செய்திடவும். உங்கள் கம்ப்யூட்டர் இணைய இணைப்பில் இருந்தாலே இது முடியும். இதில் கிளிக் செய்தவுடன், சில நிமிடங்கள் சோதனை செய்யப்பட்டு, Feature update to Windows 10, version 1607 என்று காட்டப்படும். Update என்பதில் கிளிக் செய்தால், உடனே, அதற்கான கோப்புகள் அனைத்தும் மைக்ரோசாப்ட் தளத்திலிருந்து உங்கள் கம்ப்யூட்டருக்குத் தரவிறக்கம் செய்யப்படும். இந்த செயல்பாட்டினை மேற்கொள்கையில், கம்ப்யூட்டருக்கு வரும் மின்சக்தி தடைப்படக் கூடாது. லேப்டாப் கம்ப்யூட்டர் எனில், பேட்டரியில் போதுமான மின்சக்தி இருக்க வேண்டும். மின் இணைப்பில் இருப்பதுவும் நல்லது.

பைல்கள் தரவிறக்கம் செய்யப்படுகையில், எத்தனை சதவீத பைல்கள் கம்ப்யூட்டரை வந்தடைந்துள்ளன என்ற சதவீதம் காட்டப்படும். அனைத்தும் கம்ப்யூட்டரை வந்தடைந்தவுடன், அவற்றை உடனே இன்ஸ்டால் செய்திடவா என்று கேட்கும். சில மணித்துளிகள் ஆகும் என்பதால், அதற்கு உங்களுக்கு நேரம் இருப்பதை உறுதி செய்து கொண்டு, இன்ஸ்டால் செய்திட ஒப்புதல் கொடுக்கவும். இப்போதும், இணைய இணைப்பு மற்றும் தீராத மின்சக்தியை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
படிப்படியாக அனைத்து அப்டேட் பைல்களும் இன்ஸ்டால் செய்யப்படும். இடையே, பலமுறை கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் செய்யப்படலாம். இறுதியாக, அனைத்தும் இன்ஸ்டால் செய்யப்பட்டவுடன், உடனே ரீஸ்டார்ட் செய்திடவா? அல்லது வேறு ஒரு நேரத்தில் ரீஸ்டார்ட் செய்திடவா? என்று கேள்வி கேட்கப்படும். உடனே, ரீஸ்டார்ட் செய்து, அப்டேட் வேலையை உடனே முடிப்பதுதான் நல்லது. 


இதற்கு இசைவு தெரிவித்தவுடன், கம்ப்யூட்டர் சிஸ்டம் மேம்படுத்தப்பட்டதால், அனைத்தும் வடிவமைக்கப்படும். எந்த அளவு மீண்டும் வடிவமைக்கப்பட்டது என்று காட்டப்படும். முழுமையாக வடிவமைக்கப்பட்டவுடன், கம்ப்யூட்டர் மீண்டும் ரீஸ்டார்ட் செய்யப்பட்டு, புதிய விண்டோஸ் 10 திரை காட்டப்படும். ஸ்டார்ட் திரையில் சில தோற்ற மாற்றங்களைக் காணலாம். முன்பு காட்டப்பட்டது போல் இல்லாமல்,இடது பக்கம் புதியதாக ஒரு பிரிவு காட்டப்படும். இதில் Presently Added என்ற தலைப்பில், அண்மையில் இணைக்கப்பட்ட புரோகிராம்கள் காட்டப்படும். அதனை அடுத்து, கீழாக, அடிக்கடி நீங்கள் பயன்படுத்தும் செயலிகளின் பட்டியல், Most Used என்ற பிரிவின் கீழ் இருக்கும். அதற்கும் கீழாக அனைத்து புரோகிராம்களும், அகர வரிசைப் பட்டியல் படி வரிசையாக இருக்கும். வலது புறம் உள்ள பிரிவில், அனைத்து செயலிகளுக்குமான டைல்ஸ்கள் இருக்கும். இதிலும், Life at a Glance மற்றும் Play and Explore என்ற இரு பிரிவுகளில் டைல்ஸ்கள் காட்டப்படும். 
இந்த மேம்படுத்தலில், கூடுதல் வசதிகளாகத் தரப்பட்டவை பின்வருமாறு:




விரும்பும் வண்ணங்களைப் பூசலாம்:

 விண்டோஸ் 10, அறிமுகம் ஆன போது, “hidden dark theme“ என்ற ஒன்றைக் கொண்டு வந்தது. இதன் மூலம் எட்ஜ் பிரவுசருக்கான 'தீம் செட்டிங்ஸ்' என்ற ஒன்றை நம் விருப்பப்படி மாற்றி அமைக்கலாம். தற்போது இந்த வண்ண மாற்றத்தினை எந்த செயலிக்குமாக மாற்றி அமைக்கலாம். இதற்கு Settings > Personalization > Colors என்று சென்று, அதில் தரப்பட்டுள்ள நிலைகளின்படி வண்ணத்தை பல்வேறு திரைக் காட்சிகளில் இயங்கும் செயலிகளில் அமைக்கலாம். எடுத்துக் காட்டாக, “Show color on title bar” என்ற ஆப்ஷன் மூலம் விண்டோ டைட்டில் பார்களுக்கு, நீங்கள் விரும்பும் வண்ணத்தினை அமைக்கலாம். அதே நேரத்தில், ஸ்டார்ட் மெனு, டாஸ்க் பார் மற்றும் ஆக் ஷன் சென்டர் ஆகியவை கருப்பு பின்னணியிலேயே இயங்கும்.



எக்ஸ்டன்ஷன் ஏற்றுக் கொள்ளும் எட்ஜ் பிரவுசர்: 

மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுசர் அறிமுகமானபோது, அது எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை ஏற்றுக் கொள்ளாதவகையிலேயே நமக்குக் கிடைத்தது. இதனால், பல புதிய வசதிகள் கிடைக்காததால், எட்ஜ் பிரவுசரைப் பல வாடிக்கையாளர்கள் பயன்படுத்தாமல், மாறா நிலையில் வேறு பிரவுசர்களையே பயன்படுத்தி வருகின்றனர். இந்த குறை இப்போது நீக்கப்பட்டுள்ளது. குரோம் பிரவுசர் பாணியிலேயே எக்ஸ்டன்ஷன் பிரவுசர்கள் எட்ஜ் பிரவுசருக்குக் கிடைக்கின்றன. எட்ஜ் பிரவுசருக்கான எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை உருவாக்கும் டெவலப்பர்களுக்கு, மைக்ரோசாப்ட் டூல் ஒன்றை வழங்கியுள்ளது. இதன் மூலம், குரோம் பிரவுசருக்கான எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை, எட்ஜ் பிரவுசருக்கான எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களாக மாற்றலாம். பின்னர் அவற்றை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த விண்டோஸ் ஸ்டோரில் அப்லோட் செய்திடலாம். இதனை வழங்கும் தொடக்க நிலையில், Adblock, Adblock Plus, Amazon Assistant, Evernote Web Clipper, LastPass, Mouse Gestures, Office Online, OneNote Web Clipper, Page Analyzer, Pin It Button (for Pinterest), Reddit Enhancement Suite, Save to Pocket, மற்றும் Translate ஆகிய எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை, ஸ்டோரில் மைக்ரோசாப்ட் வழங்கியுள்ளது.



எட்ஜ் பிரவுசரில் கூடுதல் வசதிகள்:

ப்ளாஷ் செயலியில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதால், அந்த ப்ளக் இன் செயலியை இயக்கும் முடிவை எட்ஜ் பிரவுசர் நமக்கே விட்டுவிடுகிறது. எனவே, ஏதேனும் ஓர் இணைய பக்கத்தில், ப்ளாஷ் இணைந்த படம் இருந்தால், அது இயக்கப்படாமல் வைக்கப்பட்டு, அதனை இயக்கும் முடிவு பயனாளரிடம் விடப்படும். இது குரோம் பிரவுசரில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தது. தற்போது எட்ஜ் பிரவுசரில் தரப்பட்டுள்ளது. 



டேப்களை 'பின்' செய்திடும் வசதி:


நீங்கள் விரும்பும் மற்றும் அடிக்கடி திறந்து பார்த்து செயல்படவிரும்பும், இணைய தளங்களை, 'பின்' செய்திடலாம். குறிப்பிட்ட டேப்பில், ரைட் கிளிக் அல்லது தொடர்ந்து சிறிது நேரம் அழுத்தினால், அந்த டேப் சிறிய ஐகானாக மாறி, டேப் பாரின் இடது புற ஓரத்தில் (படத்தைப் பார்க்கவும். எடுத்துக் காட்டாக ஜிமெயில் அமைக்கப்பட்டுள்ளது) அமர்ந்து கொள்ளும். அடுத்து எப்போது எட்ஜ் பிரவுசரைத் திறந்தாலும், இந்த ஐகான் தெரியும். அதில் கிளிக் செய்து அப்பக்கத்தினைப் பெறலாம்.


அனுமதிக்கப்படும் அறிவுப்புகள்: 

இணையதளங்கள் தங்கள் அறிவிப்புகளை வழங்க மைக்ரோசாப்ட் அனுமதி அளித்துள்ளது. நீங்கள் இணைய தளம் ஒன்றைப் பார்க்ைகயில், அது, அறிவிப்புகள் என்னும் நோட்டிபிகேஷன்களை அனுமதிக்கிறீர்களா? என்று கேட்கும். இசைவு தெரிவித்தால், அந்த தளம் தன் அறிவிப்புகளை உங்களுக்கு வழங்கும். அவை உங்கள் சிஸ்டத்தின் Action Centreல் இருக்கும். அந்த நோட்டிபிகேஷனில் கிளிக் செய்தால், நீங்கள் அந்த இணையப் பக்கத்திற்கே அழைத்துச் செல்லப்படுவீர்கள்.



முன்னோக்கியும் பின்னோக்கியும் செல்ல: 

உங்களிடம் தொடு உணர் திரை கொண்ட கணினி இருந்தால், எட்ஜ் பிரவுசரில், பார்த்துக் கொண்டிருக்கும் இணையப் பக்கத்திற்கு முன்னரும் அடுத்தும் பார்த்த தளங்களைப் பார்க்க, இடது வலதாக ஸ்வைப் செய்தால் போதும். அம்புக் குறிகளைத் தேடி கிளிக் செய்திட வேண்டிய அவசியம் இல்லை. இந்த மேம்பாட்டு கோப்பில், எட்ஜ் பிரவுசரில், மைக்ரோசாப்ட் பல புதிய வசதிகளைத் தந்துள்ளது. மேலும் தருவதற்கு உறுதி அளித்துள்ளது.



விண்டோஸ் டிபண்டர் தரும் இரண்டாம் அடுக்கு பாதுகாப்பு:

முன்பு, நம் கம்ப்யூட்டரில் தர்ட் பார்ட்டி ஆண்ட்டி வைரஸ் செயலி ஒன்றை நிறுவி இருந்தால் விண்டோஸ் டிபண்டர் தானாகவே தன் செயல்பாட்டினை நிறுத்திக் கொள்ளும். இந்த மேம்படுத்தலில், விண்டோஸ் டிபண்டர் செயலிக்கு “Limited Periodic Scanning” என்னும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. தானாகவே இயங்கி, கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்து, இரண்டாம் அடுக்கு பாதுகாப்பு ஒன்றைத் தருகிறது. இதனை இயக்க, Settings > Update & Security > Windows Defender என்று சென்று “Limited Periodic Scanning” என்பதனை இயக்கி அமைக்கவும். 



அனைத்திலும் இயங்கும் ஒருங்கிணைந்த ஸ்கைப் செயலி:

விண்டோஸ் 8 மற்றும் 8.1 சிஸ்டங்களுடன், “Skype for Windows” மற்றும் “Skype for Windows desktop” எனத் தனித்தனியே செயலிகளை, மைக்ரோசாப்ட் வழங்கியது. ஆனால், விண்டோஸ் 10 தரப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன், மைக்ரோசாப்ட் அதனைத் திரும்பப் பெற்றது. விண்டோஸ் 10 Get Skype என்னும் அப்ளிகேஷனுடன் தரப்பட்டது. நவம்பர் மாதத்தில் அப்டேட் செய்திடுகையில், மெசேஜ், போன் மற்றும் விடியோ செயல்பட சோதனை முறையில் தனித்தனி அப்ளிகேஷன்கள் தரப்பட்டன. தற்போது, மைக்ரோசாப்ட் இந்த தனித்தனி அப்ளிகேஷன்களைத் திரும்பப் பெற்று, அனைத்து சாதனங்களிலும் ஒருங்கிணைந்து இயங்கும் வகையில், ஸ்கைப் செயலியை மாற்றியுள்ளது. போனில் இயங்கும் ஸ்கைப் வழியாகவும் உங்கள் ஸ்கைப் செய்திகள் மற்றும் அழைப்புகளை, டெஸ்க் டாப் கம்ப்யூட்டரிலும், லேப்டாப் கம்ப்யூட்டரிலும் பெறலாம். இது ஸ்கைப் செயலியில் தரப்பட்டுள்ள “messaging everywhere“ என்ற டூல் மூலம் சாத்தியமாகிறது.



விண்டோஸ் 10 ரீ இன்ஸ்டலேஷன்: 

விண்டோஸ் 10 சிஸ்டத்தினை மீண்டும் புதியதாகப் பதிக்க விரும்பினால், Settings > Update & Security > Recover என்று செல்லுங்கள். இது உங்களை மைக்ரோசாப்ட் Answers Forum என்னும் இணைய தளத்திற்கு அழைத்துச் செல்லும். இங்கு டூல் ஒன்றை தரவிறக்கம் செய்து, அதன் மூலம் விண்டோஸ் 10 சிஸ்டத்தினை மீண்டும் பதிந்து கொள்ளலாம். இதில் என்ன சிறப்பு என்றால், கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனம், தேவையில்லாமல் பதிந்து கொடுத்த புரோகிராம்கள் இதில் இருக்காது.



மாற்றி அமைக்கப்பட்ட 'ஸ்டார்ட்' மெனு:

விண்டோஸ் 10 சிஸ்டத்தின் 'ஸ்டார்ட் மெனு' தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. முன்பு இருந்த “All Apps” ஆப்ஷன் இப்போது இல்லை. ஸ்டார்ட் மெனுவின் இடது பக்கத்தில், கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துள்ள அனைத்து செயலிகளும் காட்டப்படுகின்றன. இடதுபுறமாக, நாம் அடிக்கடி பயன்படுத்தும் செயலிகளும், அண்மையில் இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலிகளும் காட்டப்படுகின்றன. அடுத்தடுத்து, புதிய செயலிகளை பதிவு செய்கையில், அவை இந்தப் பட்டியலில் காட்டப்பட வேண்டுமா என்று கேட்கப்பட்டு இணைக்கப்படும். இல்லையேல், அதிகபட்சமாக மூன்று செயலிகள் மட்டுமே காட்டப்படும்.

File Explorer, Settings, மற்றும் Shut Down ஆகிய மிக முக்கியமான, அடிக்கடி தேவைப்படும் பட்டன்கள் இடது புறமாகத் தனியே தரப்பட்டுள்ளன.  நீங்கள் ஒன் ட்ரைவ் பயன்படுத்துபவராக இருந்தால், இப்போது உங்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சி தரும் வசதி ஒன்றைப் பார்க்கலாம். இனி நீங்கள் பைல்களைத் தேடி, அவற்றின் முழு அல்லது பாதி பெயர்களைத் தேடல் கட்டத்தில் இடுகையில், அந்த பைல், கம்ப்யூட்டரில் மட்டுமின்றி, ஒன் ட்ரைவிலும் உள்ளதா எனத் தேடப்படும்.



டாஸ்க் வியூவில் முன்னேற்றம்:

 விண்டோஸ் 10 சிஸ்டம் ஒன்றுக்கு மேற்பட்ட டெஸ்க்டாப் விண்டோக்களை உருவாக்கிச் செயல்படும் வாய்ப்பினைத் தந்துள்ளது. இந்த விண்டோக்களைத் தற்போது Task View interfaceல், 'பின்' செய்து வைக்கலாம். இதன் மூலம், ஒவ்வொரு விர்ச்சுவல் டெஸ்க்டாப் விண்டோவிலும் அவை காட்டப்படும். இதனை செயல்படுத்த, விண்டோ ஒன்றை Task View interfaceல் ரைட் கிளிக் செய்து, “Show this window on all desktops” என்பதனைத் தேர்ந்தெடுத்தால், அது பின் செய்யப்படும். எடுத்துக் காட்டாக, மியூசிக் அல்லது மெசேஜ் விண்டோவினை நாம் அனைத்து விர்ச்சுவல் விண்டோவிலும் காட்டப்பட வேண்டும் என விரும்புவோம். அப்போது இந்த வசதி நமக்குக் கை கொடுக்கும். 

டச்பேட் இயக்கத்திலும் புதிய வசதி ஒன்று தரப்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட டெஸ்க்டாப் விண்டோ அமைக்கப்பட்டிருக்கையில், டச் பேடில் நான்கு விரல்களைக் குவித்து வைத்து, இடது வலதாக ஸ்வைப் செய்தால், டெஸ்க்டாப் விண்டோக்களுக்கிடையே செல்லலாம். இந்த செயல்பாடு “precision touchpad,” எனச் சான்றளிக்கப்பட்ட டச் பேட்களில் மட்டுமே செயல்படும். 



டாஸ்க் பாரில் கூடுதல் வசதிகள்:

இந்த அப்டேட், டாஸ்க் பாரை கூடுதலாகப் பல வேலைகள் மேற்கொள்ளும் இடமாக மாற்றியுள்ளது. இது நம் காலண்டர் செயலியுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. டாஸ்க் பாரில் உள்ள கடிகாரத்தில், அப்போதைய நேரத்தில் கிளிக் செய்தால், உடனே, நம் காலண்டரில் பதிந்து வைத்துள்ள இன்றைய பணி அட்டவணையைக் காட்டுகிறது. + பட்டனைத் தட்டினால், உடனே காலண்டர் செயலி திறக்கப்பட்டு, புதியதாக ஏதேனும் பணியினைச் சேர்க்க வழி தருகிறது. இதில் உள்ள இசைக்கான பிரிவிலும் கூடுதல் வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. 

கம்ப்யூட்டரில் ஹெட்செட் ஒன்றை இணைத்துவிட்டால், நாம் எந்த ஸ்பீக்கரில் (கம்ப்யூட்டர் / ஹெட்செட்) கேட்க விரும்புகிறோம் என்று தேர்ந்தெடுக்க ஆப்ஷன் கிடைக்கிறது.  இப்போது டாஸ்க் பார் செட்டிங்ஸ் அமைப்பு, செட்டிங்ஸ் பிரிவிலேயே இணைக்கப்பட்டுள்ளது. எனவே, செட்டிங்ஸ் பக்கத்தில், Settings > Personalization > Taskbar என்று சென்று, டாஸ்க் பார் அமைப்பினை மாற்றி அமைக்கலாம். 



லாக் ஸ்கிரீன் மாற்றம்: 


லாக் ஸ்கிரீன் தோற்றத்தில் சில மாற்றங்கள் தரப்பட்டுள்ளன. இதுவரை நம்முடைய மின் அஞ்சல் முகவரி, நாம் லாக் இன் செய்திடுகையில் காட்டப்பட்டது. இந்த தனிநபர் தகவல் ஏன் காட்டப்பட வேண்டும் எனப் பல பயனாளர்கள், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு பின்னூட்டம் தந்தனால், நீங்கள் மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் கொண்டு லாக் இன் செய்தால், அந்த மின் அஞ்சல் முகவரியைக் காட்டாமல் இருக்க வசதி தரப்பட்டுள்ளது. Settings > Accounts > Sign-in options > Privacy என்ற பிரிவு சென்று, இதனை அமைக்கலாம். கம்ப்யூட்டரில் ஏதேனும் இசை சார்ந்த கோப்பு இயங்கிக் கொண்டிருந்தால், அதன் ஒலியைக் குறைக்கவும், அதிகரிக்கவும், மீண்டும் ஸ்கிரீனைத் திறந்து செல்ல வேண்டியதில்லை. லாக் ஸ்கிரீனிலேயே, கீழாக அதற்கான கண்ட்ரோல் டூல்கள் தரப்பட்டுள்ளன. 


இதுவரை செட்டிங்ஸ்>சிஸ்டம் பிரிவில் இருந்த Battery Saver பிரிவின் பெயர் Battery என மாற்றப்பட்டுள்ளது. இதன் திரையில் விரிவான முறையில் பல விருப்பத் தேர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு செயலியும், பின்புலத்தில் இயங்கிக் கொண்டிருக்க வேண்டுமா? (“Always allow in background” / “Never allow in background,”) என்பதை இங்கு அமைக்கலாம். இவற்றுடன் தற்போது “Managed by Windows” என்னும் ஆப்ஷனும் தரப்பட்டுள்ளது. இதனைத் தேர்ந்தெடுத்தால், விண்டோஸ் சிஸ்டம் மிகத் திறமையாகச் செயல்பட்டு, சில செயலிகள் மிக அதிகமாக ராம் மெமரி, பேட்டரி திறன் ஆகியவற்றைப் பயன்படுத்தினால், அவற்றைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும். செயலிகளை நாம் பயன்படுத்தாமல் வைத்திருந்தால், அவை இயங்குவதை முற்றிலுமாக நிறுத்தி வைக்கும்.



வேலை மும்முரத்தில் அப்டேட் வேண்டாம்:

 விண்டோஸ் சிஸ்டம் தொடர்ந்து தானாக அப்டேட் செய்யப்படும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. எனவே, கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருந்தால், பின்னணியில், அப்டேட் சோதனை செய்யப்பட்டு, அவை இன்ஸ்டால் செய்யப்படும். ஆனால், நாம் குறிப்பிட்ட நேரத்தில், அதிக வேலையை கம்ப்யூட்டரில் வழக்கமாக மேற்கொள்வதாக இருந்தால், அந்த நேரத்தைக் குறிப்பிட்டுவிட்டால், அந்த நேரத்தில், விண்டோஸ் தன் அப்டேட் வேலையை மேற்கொள்ளாது. இதனை செட் செய்திட, Settings > Update & Security > Windows Update என்று சென்று, நம்முடைய “active hours,” என்ன என்பதனை செட் செய்து வைக்கலாம். இதனால், நாம் பணியாற்றிக் கொண்டிருக்கையில், ரீ ஸ்டார்ட் செய்திடும் வேலையெல்லாம் மேற்கொள்ளப்பட மாட்டாது. 



உணர்வு படங்கள் மாற்றம்: 

'எமோஜிஸ்' என அழைக்கப்படும் உணர்வுப் படங்கள் தற்போது முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளன. முற்றிலுமாக, யூனிகோட் அமைப்பில் இவை அமைந்துள்ளன. எந்த வண்ணப் பின்னணியிலும் தெளிவாகத் தெரியும் வகையில் இவை மாற்றப்பட்டுள்ளன. இன்னும் பல மாற்றங்களை விண்டோஸ் 10க்கென, ஆகஸ்ட் 02ல் தரப்பட்டுள்ள அப்டேட் பைல் தந்துள்ளது. நாம் எளிதாக அடிக்கடி பயன்படுத்தக் கூடிய வசதிகள் மட்டுமே மேலே தரப்பட்டுள்ளன. கீழே சுருக்கமாகச் சில மாற்றங்கள் இங்கு தரப்படுகின்றன.

1. விண்டோஸ் கிராஷ் ஆகும் போது கிடைக்கும் “blue screen of death” திரையில், பிரச்னையை உடனடியாக உணர்ந்து கொள்ள QR Code ஒன்று தரப்படுகிறது. நம் ஸ்மார்ட் போன் மூலம் இதனை எளிதாக அறிந்து கொள்ளலாம்.
2. விண்டோஸ் 10 சிஸ்டத்தை இலவசமாகப் பெறுவதை “digital entitlement” என மைக்ரோசாப்ட் அழைத்தது. தற்போது அது “digital license” என அழைக்கப்படுகிறது. பின் நாளில் விண்டோஸ் இயக்கத்தினை மீண்டும் அமைப்பதாக இருந்தால் நமக்கு உதவியாய் இருக்கும்.
3. 'நோட்டிபிகேஷன் ஏரியா'வில் விண்டோஸ் டிபண்டர் செயலிக்கென தனியே ஐகான் தரப்பட்டுள்ளது. இதனைக் கிளிக் செய்து, அறிவிப்புகளையும் அதன் செயல்பாட்டினையும் அறியலாம்.
4. பைல் எக்ஸ்புளோரர் செயலிக்குப் புதிய ஐகான் தரப்பட்டுள்ளது. இது, விண்டோஸ் 10 சிஸ்டத்தின் மற்ற ஐகான்களுடன் இணைவாக உள்ளது. 
5. என்.டி.எப்.எஸ். பைல் சிஸ்டத்தில், 260 கேரக்டர்களுக்கு மேல் ஒரு பைலின் பெயரை அமைக்க இதுவரை முடியாது. தற்போது இது விலக்கப்பட்டுள்ளது. 
இவை தவிர பல விண்டோஸ் செயலிகளும், விண்டோஸ் ஸ்டோர் வழியாக மேம்படுத்தப்பட்டுள்ளன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் செயலிகளில் உள்ள மாற்றங்களில் சில மட்டும் மேலே தரப்பட்டுள்ளன. மேலும் மாற்றங்கள் வருகையில், அவை குறித்த குறிப்புகள் தரப்படும்

Monday 11 July 2016

பைபிளில் சொல்லப்படுவது உண்மை

யூதர் மற்றும் கிறித்துவர்களின் புனித நூலான பைபிள், அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட 1815-ஆம் ஆண்டிற்குப் பின்பு சுமார் 500 கோடிக்கும் மேலான பிரதிகள் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது உலகம் முழுக்க பரவியுள்ள ஒரு நூல்..! 
 
நாசாவின் சமீபத்திய ஆய்வின் மூலம் பைபிளில் கூறப்படும் கதைகள் எல்லாமே உண்மை என்று உறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..!
 
qJw2VSr.jpg
 
100 மற்றும் 1000 ஆண்டுகளாய் என்ற இடைவெளியில் சூரியன், சந்திரன் உட்பட பல கிரகங்களின் விண்வெளி நிலைகளை (positions of several space objects) பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
IlQ086U.jpg
 
நமது பூமி கிரகம் பிற விண்வெளி பொருட்களோடு மோதல் நிகழத்தாமல் இருக்குமா என்றவொரு விண்வெளி ஆய்வுதான் இது.
 
ui9m6KU.jpg
 
சுற்றுப்பாதையில் எல்லாமே நேரத்தினால் தீர்மானிக்கப்படுகிறது. அதனால், விண்வெளி நிகழ்வுகளில் தத்தம் போக்கில் செல்லும் பொருட்களுக்கு எந்தவிதமான குறுக்கீடும் இருக்காது.
 
Cg9qAC3.jpg
 
அம்மாதிரியான ஆய்வின் கணினி கணக்கீடுகளின் போது ஏற்பட்ட ஒரு சிவப்பு சமிக்ஞை மூலம் ஒட்டுமொத்த ஆய்வுமே ஸ்தம்பித்தது. அதாவது கிரங்களின் விண்வெளி நிலை ஆய்வில் ஏதாவது ஒரு தரவு அல்லது ஒரு முடிவோ தவறாகி விட்டது என்று அர்த்தம்..!
 
9h533qX.jpg
 
சேவை துறை தலையீட்டுக்குப் பிறகு, கடந்துவிட்ட நேரத்தில் (elapsed time) எங்கோ ஒரு விண்வெளி நாளில் குறிப்பிட்ட நேரம் காணாமல் போயிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 
uECpT76.jpg
 
இந்த பிரச்சினையை யாராலும் தீர்க்க முடியாத நிலையில் பைபிள் வாசகம் ஒன்று இதற்கு தீர்வாய் அமைந்தது. யோசுவாவின் புத்தகத்தில் உள்ள வரியில் இந்த பிரச்னைக்கான அழகான (அபத்தமான) அர்த்தம் கிடைத்தது.
 
Vb5ecml.jpg
 
யோசுவா 10: 8-ல் எதிரிகள் சூழப்பட யோசுவா கவலை கொள்கிறான். இருள் கவிழ்ந்தால் தான் தோற்கப் பெறுவேன் எனவே சூரியனை நிற்க செய்ய வேண்டும் என்று யோசுவா கடவுளிடம் கேட்டார். அப்படியாகவே நிகழ்ந்தது.
 
இதனை தொடர்ந்து விண்வெளி நேரத்தில் காணாமல் போன நாள் இதுவாகத் தான் இருக்கலாம் என்ற முடிவிற்கு விஞ்ஞானிகள் வந்தனர்
 
இந்த முடிவைக் கொண்டு நிகழ்த்தப்பட்ட கணினி கணக்கீடு ஆய்வில் 23 மணி நேரம் 20 நிமிடங்கள் காணாமல் போயிருப்பது கண்டறியப்பட்டது, அதாவது யோசுவா புத்தகத்திலுள்ளது போன்றே கிட்டத்தட்ட முழு நாள், ஆனால் முழு நாள் இல்லை..!
 
CShyT3n.jpg
 
அந்த மீதமுள்ள 40 நிமிடங்கள் கிடைக்கப்பெறவில்லை என்றால், அது 1000 ஆண்டுகள் என்று நிகழ்த்தப்படும் அளவீட்டில் ஒரு பிரச்சினையை உருவாக்கும் ஆகையால் மீண்டும் பைபிள் வரிகள் பரிந்துரைக்கப்பட்டன.
 
WBhdHme.jpg
 
பின்னர் சூரியன் பின்னோக்கி போன குறிப்பு பைபிளில் இருந்துள்ளது. யாரும் முதலில் அதை நம்பவில்லை ஆனால் பின்னர் வேறு வழியின்றி அதை கணக்கிட்டு பார்த்துள்ளனர்.
 
nWYpG3C.jpg
 
எசேக்கியாவின் மரணப்படுக்கையில் விஜயம் செய்த ஏசாயா இது தனக்குரிய நேரமில்ல்லை என்று கூற சூரியன் 10 டிகிரி முன்னோக்கி செல்ல வேண்டுமா அல்லது பத்து டிகிரி பின்னோக்கி செல்ல வேண்டுமா என்று கேட்க எசேக்கியா பின்னோக்கி என்று கூறியுள்ளார். அவ்வாறே சூரியன் 10 டிகிரி பின்னோக்கி செல்ல செய்யப்பட்டுள்ளது..!
 
 
10 டிகிரி என்றால் சரியாக 40 நிமிடங்கள் ஆகும். அப்படியாக விண்வெளி நேரத்தில் காணாமல் போன ஒரு முழு நாளின் கணக்கை பைபிள் கொண்டுள்ளது என்பது தெரிய வருகிறது.
 
RoRfDbR.jpg
 
அதாவது விண்வெளி நாட்களில் காணாமல் போன அந்த முழுநாள் ஆனது 23 மணி நேரம் 20 நிமிடங்கள் (யோசுவாவிற்காக ) எனவும், 40 நிமிடங்கள் (எசேக்கியா மற்றும் ஏசாயாவிற்காக ) எனவும் முழுமையடைகிறது..!

பூமிக்கடியில் 700 கி.மீ ஆழத்தில் 2 பாரிய கட்டமைப்புகள்

அரை நூற்றாண்டுக்கு முன்பு வரையிலாக பூமி கிரகத்தின் மிக ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டவைகளெல்லாம் 'சாத்தியமற்றது' என்று பெரும்பாலானோர்களால் நம்பப்பட்டது..!

 ஆனால் சில ஆய்வாளர்கள் நமது கிரத்தின் சில துவாரங்கள் நம்மை உட்புக வழிவகுக்கும் என்று நம்பினர் அதாவது அவைகள் சுற்றியுள்ள அனைத்து பிற கிரங்களுக்கு நம்மை கொண்டு செல்லும் 'நுழைவாயில்கள்' என்று நம்புகின்றனர்..!

WAaxR7c.jpg

சமீபத்தில், பூமி மேற்பரப்பில், பிரம்மாண்டமான முத்திரத்திற்கு அடியில் இருந்து சுமார் 700 கிலோமீட்டர்கள் ஆழத்தில் அறியப்படாத ஒரு ஆக்சிஜன் மூலம் இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

கண்டுபிடிக்கப்பட்டுள்ள தோற்றம் மற்றும் அதன் குமிழ் வடிவம் போன்ற கட்டமைப்புகள் எப்படி உருவானது என்பது மிகவும் மர்மமாகவே தான் இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Tgd3OQD.jpg

மேற்கொண்டு நிகழ்த்தப்பட்ட ஆய்வின் மூலம் அந்த பாரிய குமிழ் வடிவம் போன்ற கட்டமைப்புகள் எவரெஸ்டை சிகரத்தை விட100 முறை உயரமானது என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

o5eqkj5.jpg

மேற்பரப்பில் இருந்து 2896 கிலோமீட்டர் ஆழத்தில் உள்ள பூமி கிரகத்தின் மையப்பகுதியின் மேலே இந்த கட்டமைப்புகள் அமர்ந்திருக்கின்றன.

JVtDI3k.jpg

இந்த பிரம்மாண்டமான, வினோதமான கட்டமைப்புகள் நம் கிரகம் எப்படி நடைமுறைக்கு வந்தது என்பதை கண்டறியவும், மேலும் எரிமலை வெடிப்புகள் மற்றும் டெக்டோனிக் பலகளின் பொறுப்புகள் பற்றிய பெரும் புரிதலை நிகழாத உத்சவம் என்று நம்பப்படுகிறது.

jQc2iDB.jpg

இந்த கண்டுபிடிப்பானது அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மூலம் நிகழ்த்தப்பட்டு ஜர்னல் நேச்சர் ஜியோசயின்ஸ்-ல் வெளியிடப்பட்டு விவரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

nSOnYYu.jpg

சுவாரஸ்யமான ஆச்சரியம் என்னவென்றால் இந்த கட்டமைப்புகள் நம் கிரகத்தின் எதிரெதிர் பக்கங்களில் அமைந்துள்ளது. ஒன்று பசிபிக் பெருங்கடலில் கீழேயும் மற்றொன்ரு அட்லாண்டிக் பெருங்கடல் கீழேயும் அமைந்துள்ளது.

0KCw0Yq.jpg

இந்த தெர்மோ இரசாயன குவியல் (Thermochemical piles) கட்டமைப்புகள் சராசரியை விட வெப்பமான பூமி கிரகிதத்தின் மூடக (Earth mantle) பொருட்களால் உருவாகி இருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் விவரிக்கின்றனர்.


சில புதிய ஆய்வுகளின்படி இந்த கட்டமைப்புகள் தனித்துவமான வேதியியலாக இருக்க முடியும் என்ற கோணத்தையும் வழங்குகிறது..!

இவைகள் பூமி கிரகத்தில் தோன்றிய எச்சங்கள் மூலம் கிட்டத்தட்ட 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்பு கூட உருவாகி இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.


இந்த மர்மமான கட்டமைப்புகள் எப்படி உருவாகின என்பது பற்றிய துல்லியமான விளக்கம் இல்லாவிட்டாலும் இதன் மூலம் பூமி எப்படி உருவானது எப்படி இயங்குகிறது என்பதை நிச்சயம் ஆராய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

tcqeazA.jpg

அதாவது ஒரு நரம்பியல் நிபுணர் அல்லது உளவியலாளர்கள், மனித மூளை தெரியாதப்படாத அமைப்பு கண்டறிந்தால் அதிலுருந்து தீவிரமான முழு அமைப்பு செயல்பாடையும் அதன் பங்களிப்பை புரிந்துகொள்வர் அபப்டித்தான் இதுவும்..!

Friday 24 June 2016

ஐன்ஸ்டைனின் புதிர்! Albert Einstein puzzle

அல்பிரேட் ஐன்ஸ்டைனைப்பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். மாபெரும் விஞ்ஞானியான அவரால் சில புதிர்கள் கேட்கப்பட்டதுண்டு. அவற்றிலிருந்து ஒரு புதிரையே இன்று நீங்கள் இங்கு தீர்க்கப்போகிறீர்கள்.அவர் இப்புதிரை கூறும் போது 98% ஆனவர்களால் இதற்கு சரியான பதிலை அளிக்க முடியாது என்று கூறியிருந்தார். அப்போ நீங்கள் அந்த 2% ஆனவர்களில் ஒருவரா என்பதை தீர்த்து அறிந்துகொள்ளுங்கள்!

                                                  


      கேள்வி :
                         *ஒரு தெருவில் 5 வீடுகள் வரிசையாக உள்ளன. ஒவ்வொன்றும் வெவ்வேறு நிறங்களில் வர்ணம் தீட்டப்பட்ட வீடுகள்.
                          *ஒவ்வொரு வீட்டிலும் வெவ்வேறு நாட்டைச்சேர்ந்த நபர்கள் தனித்தனியே வசித்துவருகிறார்கள்.
                           *இந்த ஐந்து வீட்டவர்களும், ஒருவருக்கொருவர் வித்தியாசமான பழ‌க்கவழக்கங்களை கொண்டவர்கள்.     



                             அதாவது,  வித்தியாசமான குடிப்பழக்கம், வித்தியாசமான புகைப்பழக்கம் மற்றும் வித்தியாசமான செல்லப்பிராணிகள் வளர்க்கும் பழக்கம்.



இவர்களில் யார் மீனை செல்லப்பிராணியாக வளர்ப்பவர்?

உதவி தகவல்கள் :

1. பிரித்தானியர் சிவப்பு வர்ண வீட்டில் வசிக்கிறார்.
2. சுவீடனியர் நாயை செல்லப்பிராணியாக வளர்க்கிறார்.
3. டென்மார்க் நாட்டவர் தேனீர் அருந்துவார்.
4. பச்சை வர்ண வீடு அடுத்ததாகவும், வெள்ளை வர்ண வீட்டிற்கு இடது புறமாகவும் உள்ளது.
5. பச்சை வர்ண வீட்டுக்காரர் கோப்பி அருந்துவார்.

6. “Pall Mall” வகை சிகரெட்டை புகைப்பவர் செல்லப்பிராணியாக பறவைகளை வளர்க்கிறார்.
7. மஞ்சல் வர்ண வீட்டிற்கு சொந்தக்காரர் “Dunhill” வகை சிகரெட்டை புகைப்பார்.
8. நடுவீட்டில் இருப்பவர் பால் குடிப்பார்.
9. நோர்வேஜியன் முதலாவது வீட்டில் வசிக்கிறார்.
10. “Blends” வகை சிகரெட்டை புகைப்பவர் , பூணையை செல்லப்பிராணியாக வளர்ப்பவருக்கு அடுத்ததாக இருக்கிறார்.

11. குதிரையை செல்லப்பிராணியாக வளர்ப்பவர், “Dunhill” வகை சிகரெட்டை புகைப்பவருக்கு அத்ததாக இருக்கிறார்.
12. “Blue Master” வகை சிகெர்ட்டை புகைப்பவர் பியர்/பீர் (Beer) உம் அருந்துவார்.
13. ஜேர்னம்னியர் “Prince” வகை சிகரெட் புகைப்பார்.
14. நோர்வேஜியன் நீல வர்ண வீட்டிற்கு அடுத்து வசிக்கிறார்.
15. “Blends” வகை சிகரெட்டை புகைப்பவரின் அயலவர் தண்ணீர் குடிப்பவராவார்.

முயற்சியுங்கள், நிச்சயம்  பதில் கிடைக்கும்!

சரியான விடையை செய்முறையுடன் கூறுங்கள்.

https://udel.edu/~os/riddle-solution.html

Thursday 19 May 2016

நிலவுக்கு திரும்ப போகாதது ஏன்..? நாசா மறைக்கும் 'டார்க் சீக்ரெட்'..?!

நிலவு, பூமி கிரகத்தின் மிக அருகமையில் இருப்பினும் கூட மறுபடியும் நாம் ஏன் மனிதர்களை அங்கு அனுப்பவில்லை..? இறுதியாக நிலவிற்கு சென்ற அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா நிலவு சார்ந்த இருண்ட ரகசியம் எதையாவது மறைகிறதா.? - என்றெல்லாம் நீங்கள் எப்போதாவது யோசித்து உண்டா..?

 அப்படியெல்லாம் யோசித்ததில் இருந்து கிளம்பியது தான் நிலவு சார்ந்த ஒரு சதியாலோசனை கோட்பாடு - டார்க் சீக்ரெட் ஆப் மூன்..!

 wV7Obfb.jpg

நிலவின் முதுகு :

நிலவின் முதுகு அதாவது, பூமியின் எந்தவொரு பகுதியில் இருந்து பார்த்தலும் காணமுடியாத நிலவு பகுதி தான் ஏகப்பட்ட சதியாலோசனைகளும், புரளிகளும் கிளம்ப காரணமாகும்..!

 3TIdhh2.jpg

 ரகசிய தளங்கள் :

நிலவின் முதுகில் ஏலியன் எனப்படும் வேற்றுகிரக வாசிகளின் ரகசிய தளங்கள் (Alien secret Moon base) இருப்பதாக சந்தேகிக்கின்றன சதியாலோசனை கோட்பாட்டாளர்கள்..!

 h1KvDBJ.jpg

 மறுபடியும் :

மேலும், செவ்வாய் வரை ஆராயும் நாம், ஏன் மறுபடியும் நிலவிற்கு மனிதர்களை அனுப்பவில்லை..? என்ற கேள்விக்கான பதிலையும் சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் எதிர் நோக்குகின்றன..!

 XF63CS3.jpg

 திட்டமிடவில்லை :

செவ்வாயில் குடியிருப்புகள் அமைக்க திட்டமிடும் உலக நாட்டு விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் ஏன் நிலவில் குடியிருப்புகளோ, தளங்களோ அமைக்க திட்டமிடவில்லை என்றும் சதியாலோசனை கோட்பாடுகள் கேள்வி எழுப்புகின்றன..!

 1x5zP5k.jpg

 மூலப்பொருட்கள் :

நிலவானது எந்தவொரு மூலப்பொருட்கள் அல்லது பொருட்களின் அணுகலும் இன்றி செயற்கையாக வடிவமைக்கப்பட்ட ஒரு மிதக்கும் விண்வெளி நிலையத்தை போல் தான் தோன்றுவதாகவும் கோட்பாடுகள் சந்தேகிகிறது.


 ஒற்றுப்போகின்றனர் :

நிலவில் ஏலியன் தளம் உள்ளது அங்கு தரை இறங்குவதும், தங்குவதும் விபரீதமானது என்ற கருத்தோடு, நிலாவற்கு சென்ற நாசாவின் விண்வெளி வீரர்கள் பெரும்பாலும் ஒற்றுப்போகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 yZqnO66.jpg

 மறுபக்கம் :

நிலவு சார்ந்த மர்மமான சதியாலோசனை கோட்பாடுகள் ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் கடற்படை புலனாய்வு அலுவலகத்தை (Naval Intelligence Office) சேர்ந்த மில்டன் கூப்பர் நம்ப முடியாத கருத்தொன்றை பகிர்ந்துள்ளார்.

 jyIZQdJ.jpg

 லூனா :

"நிலவில் ஏலியன் தளங்கள் இருப்பது உண்மைதான், அமெரிக்க கடற்படை புலனாய்வு சமூகத்தினரின்படி அந்த தளம் ஆனது 'லூனா' என்று வரையறுக்கப்பட்டுள்ளது" என்கிறார்.

 4rdn3ti.jpg

 சுரங்க செயற்பாடுகள் :

அதுமட்டுமின்றி அந்த லூனா பகுதியில் ஒரு பெரிய சுரங்க செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருகிறது என்ற ஆதராமில்லா தகவலையும் கூப்பர் தெரிவித்துள்ளார்.

 5fmT27s.jpg

 தாய் கப்பல்கள் :

அந்த சுரங்க செயல்பாடுகளில் தான், வேற்றுகிரக வாசிகளின் தாய் கப்பல்கள் ஈடுப்பட்டு கொண்டிருக்கின்றன, அதில் இருந்து வரும் சிறிய வகை பறக்கும் தட்டு அல்லது விண்கலங்களை தான் நாம் பூமியில் அவ்வபோது பார்க்க நேரிடுகிறது என்றும் கூப்பர் தெரிவித்துள்ளார்.

 jMNG5iW.jpg

 மீண்டும் நிலவிற்கு :

இதுபோன்ற விபரீதமான காரணங்களால் தான் மனிதர்களை மீண்டும் நிலவிற்கு அனுப்பவில்லை என்பது தான் பெரும்பாலான சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் மற்றும் ஏலியன் நம்பிக்கையாளர்களின் கருத்தாகும்..!

2017 : ஐந்து கருவிகளை வெளியிடும் சாம்சங், ஆனா ஒரு ட்விஸ்ட்.!

ஆப்பிள் நிறுவனம் தனது எஸ் சீரிஸ் வகை ஸ்மார்ட்போன்களை நிறுத்தி விடும் என்றும் ஒவ்வொரு ஆண்டும் மேம்படுத்தப்பட்ட ஐபோன் கருவிகளை மட்டும் வரும் ஆண்டுகளில் வெளியிட கூடும் என இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது. 

இதோடு அடுத்து வெளியாகும் ஐபோன் 8 கருவியானது முழுமையாக கிளாஸ் பாடி கொண்டி வடிவமைக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது. இது ஒரு பக்கம் இருக்க சாம்சங் நிறுவனமும் தன் பங்கிற்கு புதிய திட்டங்களை கையில் வைத்திருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 

kDVZLG4.jpg

சாம்சங்

சாம்சங் நிறுவனம் 2017 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் ஐந்து கருவிகளை வெளியிடும் என்றும் இதில் ஒரு கருவி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் விதமாக அமையும் என்றும் கூறப்படுகின்றது. 

L5PibRw.jpg

4கே டிஸ்ப்ளே

அதன் படி சாம்சங் வெளியிட இருக்கும் ஒரு கருவியில் மடிக்கும் திறன் கொண்ட 4கே டிஸ்ப்ளே வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

RE4YAy0.jpg

கருவிகள்

இதோடு சாம்சங் கேலக்ஸி எஸ்8, எஸ்8 எட்ஜ், கேலக்ஸி நோட் 7, கேலக்ஸி நோட் 7 எட்ஜ் போன்ற கருவிகள் 2017 ஆம் ஆண்டு வெளியாகும். மடிக்கும் திறன் கொண்ட கருவியானது கேலக்ஸி எக்ஸ் என அழைக்கப்படலாம் என கூறப்படுகின்றது. 

Q5AWE29.jpg

கேலக்ஸி எக்ஸ்

எனினும் கேலக்ஸி எக்ஸ் என்பது அந்நிறுவனம் தற்சமயம் வழங்கியிருக்கும் பெயர் தான் என்பதோடு அந்நிறுவனம் ஓஎல்இடி திரை தயாரிப்பதில் பல ஆண்டு அனுபவம் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

m3AuhIO.jpg

திரை

சாம்சங் நிறுவனம் அடுத்து தயாரிக்கும் திரை கேல்க்ஸி எஸ்7 எட்ஜ் போன்று வளைந்து இருக்காமல், கருவியை பாழாக்காமல் எப்பவும் திறந்து மூடும் வகையில் திரை உருவாக்க கூடும் என சந்தை வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். 

xzwtRg0.jpg

உறுதி

கொரிய சந்தையில் இருந்து வெளியாகும் தகவல்கள் மற்றும் சாம்சங் அதிகப்படியான காப்புரிமைகளை பதிவு செய்வதை வைத்து பார்க்கும் போது மடிக்கும் திறன் கொண்ட கருவிகள் வெளியாவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாகவே கருதப்படுகின்றது. 

esEYh15.jpg

திட்டம்

சாம்சங் தரப்பில் ப்ராஜக்ட்-வேலி என பெயரிடப்பட்டுள்ள இந்த கருவி வாலட் போன்று பாதியாக மடித்து வைக்குமளவு இருக்கும் என்றே கூறப்படுகின்றது.

'மீண்டு'ம் களமிறங்கும் நோக்கியா.!

ஒரு காலத்தில் உலக ஸ்மார்ட்போன் சந்தையில் தவிர்க்க முடியாத இடத்தில் இருந்த நோக்கியா நிறுவனம், மைக்ரோசாப்ட் வசம் கை மாறியதும் நோக்கியாவின் தாக்கம் குறைவாக இருந்தது. 

எனினும் நோக்கியா நலம் விரும்பிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக அந்நிறுவனம் மீண்டும் சந்தையில் வர இருக்கும் செய்திகள் இணையத்தில் வைரலாகியுள்ளன. 

WcT8ZUt.jpg

மைக்ரோசாப்ட்

நோக்கியா பிரான்டினை தாய்வானை சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ்கானிற்கு விற்பனை செய்வதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் நேற்று (18/05/2016) தெரிவித்துள்ளது. 

WAnS2GH.jpg

மதிப்பு

பிரபல ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ்கான் நோக்கியா பிரான்டினை சுமார் $350 மில்லியனிற்கு வாங்குகின்றது.

G8U0QcS.jpg

தயாரிப்பு

இதன் மூலம் ஃபாக்ஸ்கான் நிறுவனம் நோக்கியா பிரான்ட் பயன்படுத்தி பீச்சர் போன், ஸ்மார்ட்போன், மற்றும் டேப்ளெட் கருவிகளை தயாரிக்க முடியும். 

q71KWN5.jpg

லூமியா

2014 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கியா பிரான்ட் தவிர்த்து லூமியா மற்றும் விண்டோஸ் போன்களின் மீது அதிக கவனம் செலுத்தியது. 

koJwdIO.jpg

பீச்சர் போன்

ஸ்மார்ட்போன்களை தவிர்த்த போதும் மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கியா பிரான்டினை பீச்சர் போன்களுக்கு மட்டும் பயன்படுத்தி வந்தது.

YkHUy4m.jpg

மவுசு

மேற்கு பகுதிகளில் விற்பனை குறைந்த போதும் சர்வதேச அளவில் பீச்சர் போன்களுக்கான சந்தை ஆப்பிள் நிறுவனத்தின் ஐபாட் கருவிகளை விட அதிகமாகவே இருக்கின்றது. 

ay2nBMi.jpg

விற்பனை

2015 ஆம் ஆண்டு பீச்சர் போன்களின் விற்பனை சர்வதேச அளவில் சுமார் 590 மில்லியன் வரை இருக்கும் என முன் அறிவிப்புகளில் எதிர்பார்க்கப்பட்டது, இது ஸ்மார்ட்போன்களின் விற்பனையில் பாதியாகும். 

4TCcpUf.jpg

கணிப்பு

மேலும் 2019 ஆம் ஆண்டுகளில் பீச்சர் போன்களின் விற்பனையானது சுமார் 350 மில்லியன் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.