Sunday 29 November 2015

காந்தாரி அம்மன் யார்?-தமிழருக்கான புதிய உண்மை

காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமிழ் நாட்டிலே தாமிரபரணி ஆற்றங்கரையிலே நடந்த போராகும். அந்தப் போர் உண்மையிலேயே மலைவாழ் குரவர்களுக்கும், அப்போது புதிதாகத் தோன்றிய உழவுக்குடிகளான பாண்டியர்களுக்கும் நடந்த போராகும். காடுகளைக் களைந்து ஆற்றோரம் உழவு செய்யத் தொடங்கியவுடனே, பாண்டியர்கள் பொருளாதாரத்திலும், தொழில் நுட்பங்களிலும் உயரத் தொடங்கிவிட்டனர்.

இதைக்கண்ட ஆதிக்குடிகளான மலைவாழ் குரவர்களுக்கு பொறாமை உண்டாகி, அவர்கள் பாண்டியரிடம் வம்பிழுக்கின்றனர். தமிழக நில அமைப்பில், மருத நிலத்திற்கும், குறிஞ்சிக்கும் இடையே முல்லை இருப்பதை இன்றும் காணலாம். அந்த முல்லையை ஆண்ட கிருட்டிணன், இருவருக்கும் சமரசம் செய்ய முயன்று தோற்கிறார். அவர் இரண்டு நிலங்களுக்குமிடையில் வாழ்வதால் இருவருக்குமே நட்பாயிருக்கிறார். அதனால், போரில் நடுநிலை வகுக்கிறார். இருந்தாலும் பாண்டவருக்கு நல்ல திட்டங்களை வகுத்துக் கொடுத்து சிறிய படையான பாண்டியர் படையை, பெரிய படையான குரவர் (கௌரவர்) படையை வெற்றி கொள்ள வைக்கிறார். அவர் போரை வெல்ல நல்ல கருத்துக்களை (Idea) சொன்னதால் தான் அவருக்கு கருத்தினன் என்ற பட்டப் பெயர் கிடைக்கிறது. அதுவே, கிருத்தினன் ஆகி, கிருட்டினன் ஆகி, யூத பிராமணர்களால் கிருஷ்ணனும் ஆனது.

கருத்தினன் –> கிருத்தினன் –> கிருட்டினன் –> கிருஷ்ணன்.

குரவர் என்ற சொல் தான் கௌரவர் ஆனது. மகா பாரதத்திலே வரும் பெயர்கள் எல்லாமே பட்டப் பெயர்களே! துரியோதனன் என்பது “துர்+ஓதனன்” என்றிருந்து மருவியது. துர் என்றால் கெட்டது என்பதால் இங்கே அநியாயம் என்று பொருள் கொள்கிறது. ஓதனன் என்பது பேசுபவன் என்று பொருள். அதாவது துரியோதனன் அநியாயம் பேசுபவன் என்று பொருள். இவர்கள் நூறு பேர் என்பது நூறு குரவர் குடி மன்னர்களைக் குறிக்கும்.

இந்த நூறு குரவர் குடிகளையும் திரட்டி பாண்டியர்களுக்கு எதிராக போரிட வைத்தவன் தான் திருதிராட்ஷன். இங்கு திரு என்பது அடைமொழி. திராட்ஷன் என்பதன் மூலம் திராட்டன் என்பதே. வேஷ்டியின் மூலம் வேட்டி என்பது போல. திராட்டன் என்பது திரட்டன் என்பதின் நீட்டமே! திரட்டன் என்பது திரட்டியவன் என்பதே!

இப்படித் திரட்டியவர்களைப் போர் முடியும் வரை “காந்தம்” போலக் கவர்ந்து பிரியாமல் காத்தவள் காந்தாரி. அவள் இயல்பாகவே தலைவன் திருதிராட்டினனின் மனைவி. அவளது பட்டப் பெயர் காந்தம் என்ற சொல்லிலிருந்தே உருவானது. இதில் இன்னுமொரு விஞ்ஞாணச் செய்தி என்னவென்றால், மகாபாரதக் காலமாகிய, அதாவது 5000 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ்களுக்கு காந்தம் அதாவது Magnet தெரிந்திருக்கிறது. அதாவது இரும்பும் தெரிந்திருக்கிறது. மலைவாழ் காலத்திலேயே தமிழன் இரும்பு பிரித்தறிந்துள்ளான்.

இரும்புக்கு கரும்பொன் என்ற பெயர் உள்ளதால், அதற்குமுன்பே பொன்னையும் அறிந்தவன்.
காந்தாரியின் உடன் பிறந்தவன் தான் சகுனி. அவனது திட்டப்படியும், சதிப்படியும் பாண்டியர் சதுரங்க ஆட்டத்தில் தோற்று, பாஞ்சாலியின் துகில் உரிக்கும் நேரத்தில் தலை குனிந்ததால், அவன் அனைவரையும் தலை குனிய வைத்ததால் அவனுக்கு சம்+குனி –> சங்குனி –> சகுனி என்ற பட்டப் பெயர் வந்தது. சம் என்றால் “அனைத்தையும்” அல்லது “ஒட்டுக்க” அல்லது “கூட்டாக” என்று பொருள். ஆங்கிலச் சொல் சம் = Sum என்பது தமிழ்ச்சொல்லே!

பாஞ்சாலி என்பது நிலத்தைக் குறிக்கும். மருத நிலத்தைக் குறிக்கும். ஐந்து ஆளுக்கும் சொந்தமானவள் என்பதால் பாஞ்சாலி என்ற பட்டப் பெயர் வந்தது. அவள் பெண்ணல்ல. ஆனால், கதைக்காக பெண்ணாக உருவகம் செய்யப்பட்டாள். அவள் நிலம் என்பதால் தரைபதி அதாவது தரைதெய்வம் என்றழைக்கப்பட்டு தரைபதியே (த்ரபதி –> த்ரௌபதி –> திரௌபதி) திரௌபதி ஆனாள். அதாவது குரவர், கௌரவர் ஆனது போல. திரௌபதிக்குக் கோயில்கள் தமிழ் மண்ணில் மட்டுமே உண்டு. அவள் ஆசீவகத்தின் பச்சையம்மாளே! அவளே மீனாட்சியும் ஆகும். அவள் பாண்டியரின் கடவுளானது எப்படி என்று இப்போது புரிகிறதா?

குரவர் சமூகம் இன்றும் துரியோதனனுக்கு கோயில் கட்டிக் கும்பிட்டுக் கொண்டுள்ளது. சகுனிக்கும் கோயில் உள்ளது. இது இன்றும் குரவர்களாலேயே நிர்வகிக்கப் படுகிறது. அந்தக் கோயில்கள் இப்போதும் கேரள மாநிலத்தை சேர்ந்த கொல்லத்தில் உள்ளது.
அதேபோல, காந்தாரியையும் வழிபடும் வழக்கம் தமிழகத்தில் இன்றும் உள்ளது. யீசன் அதாவது சிவன், மலைக்குரவர் என்பதால், மலைக்குரவர்களின் ஆதித் தலைவியாகிய காந்தாரியம்மனும் காளியாகவே வழிபடப்படவேண்டும். காந்தாரியம்மன் ஆசீவகத்தின் காளியே!
ஆதிச்ச நல்லூர் என்பது மகா பாரதத்தின் அஸ்தினாபுரமே! “ஆதி நற்புரம்” என்ற சொல்லே அஸ்தினாபுரம் ஆனது. “ஆதிச்ச நல்லூரும்”, “ஆதி நற்புரமும்” ஒரே பொருள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

“குரவர் சேர் தரை” தான் குருஷேத்திரம் ஆனது.
சேர் + தரை –> சேர் + த்ர –> சேர்த்ர –> ஷேத்ர –> ஷேத்ரம்.

மக்கள் சேரும் இடம் தான் ஷேத்ரம். குரவர் சேரும் இடம் குரவர்ஷேத்ரம் –> குரஷேத்ரம் –> குருஷேத்ரம் ஆனது. ஆதாவது, பாண்டியரிடம் சண்டையிட மலையிலிருந்து இறங்கி தரையில் குரவர்கள் ஒன்று கூடிய இடம் குருஷேத்ரம்.

ஐந்து யுகங்களைப் பற்றிய தீரக்க தரிசனத்தைக் கூறியவர் கிருட்டினனே! அவர் சொன்ன நல்லக் கருத்துக்களைத் திருடியே, அதனோடு தங்களது வன்மங்களையும் சேர்த்து (அதாவது கொல்வது பாவமல்ல போன்ற அயோக்கியக் கருத்துக்களை), பகவத் கீதையை எழுதிக்கொண்டனர் யூத பிராமணர்கள்.

ஆக, குறிஞ்சி நில மக்கள் காந்தாரி அம்மனை வழிபடுவது வரலாற்று நியதி. குறிஞ்சாங்குளம் என்ற சொல்லிலேயே குறிஞ்சி நிலம் என்ற உண்மை உள்ளது. குறிஞ்சாங்குளம் ஆதிச்ச நல்லூர் அமைந்திருக்கும் தென் பகுதியிலே இருப்பது, வரலாற்றின் சுவடுகளை கன்னித் தமிழ் எப்படிக் காத்துள்ளது என்பதை நமக்கு உணர்த்துகிறது.

எனவே, மண்ணின் மைந்தர்கள் தங்களது ஆதி தெய்வத்தை வழிபடுவதைத் தடுக்க வந்தேறித் தெலுங்கருக்கு எள்ளளவும் உரிமை இல்லை. தெலுங்கரின் கொட்டம் ஒடுக்கப்படவேண்டும்.

பிரெஞ்சுப் புரட்சியின் இரத்த சரித்திரம்

கம்யூனிசத்தை வெறுக்கும் மேட்டுக்குடி அறிவுஜீவிகளிடம், சில புள்ளிவிபரங்கள் எப்போதும் கைவசம் இருக்கும். ஸ்டாலின் கால ரஷ்யாவில், இறந்தவர் எத்தனை? மாவோ கால சீனாவில் இறந்தவர் எத்தனை? பொல் பொட் கால கம்போடியாவில் இறந்தவர் எத்தனை? இதற்கான விடைகளை விரல் நுனியில் வைத்திருப்பார்கள்.
 
 
சிலநேரம், ஸ்டாலின் கொன்ற ரஷ்யர்களின் தொகை, அன்றைய ரஷ்ய சனத்தொகையை விட அதிகமாக இருக்கலாம். அதே மாதிரி, மாவோவும் மொத்த சீன சனத்தொகையை விட அதிகமானோரை கொன்றிருக்கலாம். அப்படியான சந்தேகங்களை யாரும் எழுப்பக் கூடாது. அறிவுஜீவிகளின் மேதைமையை நாங்கள் சந்தேகப் பட முடியுமா?
 
அவர்களிடம், 1793 நடந்த பிரெஞ்சுப் புரட்சி கொன்ற, பிரெஞ்சு மக்களின் தொகை எவ்வளவு என்று கேட்டுப் பாருங்கள். பதில் தெரியாமல் திரு திரு என்று முழிப்பார்கள். பிரான்சில், 1793க்கும் 1794 க்கும் இடையிலான ஒரு வருடத்தில் மட்டும், மொத்தம் ஐந்து இலட்சம் பேர் படுகொலை செய்யப் பட்டார்கள்! சிலவற்றை “இனப்படுகொலை” என்ற வரையறைக்குள் அடக்கலாம். 
 
எந்தக் குற்றமும் புரிந்திராத, இலட்சக் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப் பட்டனர்.
பிரான்சில் நடந்த புரட்சியானது, இன்றைய முதலாளித்துவ – லிபரல் அரசுகள் தோன்றுவதற்கு காரணமாக அமைந்திருந்தது. இன்று நாங்கள் “ஜனநாயகம்” என்று கூறிக் கொள்ளும் சிவில் சட்டம், அரசு நிர்வாகம், தேசிய இராணுவம், இன்னபிறவற்றை பிரெஞ்சுப் புரட்சி தான் தந்தது. பிரான்சில் புரட்சி நடந்திரா விட்டால், இன்று ஐரோப்பாவிலும், உலகம் முழுவதும் மன்னராட்சி நிலைத்து நின்றிருக்கும்.
 
பிரான்சில் புரட்சி நடந்தது பற்றி மட்டுமே, பல வரலாற்று நூல்களில் எழுதப் பட்டுள்ளது. ஆனால், புரட்சிக்குப் பிறகு என்ன நடந்தது என்ற விபரத்தை எங்கேயும் காண முடியாது. ரஷ்யாவில் போல்ஷெவிக் புரட்சிக்குப் பின்னர் என்ன நடந்ததோ, அதை விட மிகவும் மோசமான சம்பவங்கள் பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் நடந்துள்ளன. ஏனெனில், புரட்சி என்பது மாலை நேர தேநீர் விருந்து அல்ல.
 
ரஷ்யாவில் நடந்த புரட்சியில், தலைநகரான சென் பீட்டர்ஸ்பேர்க் மட்டுமே, லெனின் தலைமையிலான சமூக ஜனநாயக போல்ஷெவிக் கட்சியினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருந்தது. ரஷ்யாவின் பிற பாகங்களில் மென்ஷெவிக் மற்றும் சார் மன்னனுக்கு விசுவாசமான படையினரின் ஆதிக்கம் நிலவியது. அதனால், அங்கு ஓர் உள்நாட்டுப் போர் வெடித்தது. இந்த விபரங்கள் பலருக்குத் தெரிந்திருக்கும். ஆனால், அதே மாதிரியான வரலாற்று நிகழ்வுகள், பிரான்சிலும் நடந்தன என்ற விபரம் ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.
 
பிரான்சில், தலைநகர் பாரிஸ் மட்டுமே புரட்சியாளர்களின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. தலைநகருக்கு வெளியே பல இடங்களில், மன்னருக்கு விசுவாசமான படையினரின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. வேறு சில அரசியல் சக்திகளும், பாரிஸ் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்து கொண்டிருந்தன.
 
பிரான்சின் தெற்குப் பகுதிகளில், கத்தோலிக்க திருச்சபைக்கு விசுவாசமான படையினரும், மேற்குப் பகுதிகளில் நிலப்பிரபுக்களுக்கு விசுவாசமான படையினரும் ஒன்று சேர்ந்திருந்தார்கள். கிழக்குப் பகுதிகளில் சற்று வித்தியாசமான கிளர்ச்சி நடந்தது. பிரெஞ்சுப் புரட்சிக்கு ஆதரவான, ஆனால் பாரிஸ் அரசுக்கு எதிரான சமஷ்டிவாதிகளின் கை ஓங்கி இருந்தது.
 
பிரெஞ்சுப் புரட்சியானது, வெகு விரைவில் எதிர்ப்புரட்சியாளர்களினால் தோற்கடிக்கப் படும் அபாயம் நிலவியது. அதனால், மக்ஸ்மில்லியன் தெ ரொபெஸ்பியர் தலைமையில் ஒரு சர்வாதிகார ஆட்சி ஏற்பட்டது. அவர்கள் அதனை, “கொடுங்கோன்மைக்கு எதிரான சுதந்திரத்தின் சர்வாதிகாரம்” என்று நியாயப் படுத்தினார்கள்.
 
சோவியத் யூனியனை ஸ்தாபித்த கம்யூனிசப் புரட்சியாளர்கள், “பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம்” நிலைநாட்டப் பட்டதாக கூறிய பொழுது, எத்தனை பேர் அதைப் பரிகசித்தார்கள்? சர்வாதிகாரம் என்ற சொல்லை சுட்டிக் காட்டியே எம்மைப் பயமுறுத்தியவர்கள் எத்தனை? அதே நேரம், பிரான்ஸ் நிலைநாட்டிய “சுதந்திரத்தின் (பூர்ஷுவா வர்க்க) சர்வாதிகாரம்” அவர்களின் கண்களுக்கு தெரியாமல் போனது எப்படி?
 
அது என்ன “சுதந்திரத்தின் சர்வாதிகாரம்”? இதைக் கேள்விப்படும் நீங்கள், “சர்வாதிகாரம் சுதந்திரத்திற்கு எதிரானது” என்றெண்ணி சிரிக்கலாம். உங்கள் எண்ணம் தவறானது. நாங்கள் நவீன உலகின் மனிதர்கள் என்பதை அடிக்கடி மறந்து விடுகிறோம். 
 
அன்றைய காலகட்டம் வேறு. புரட்சிக்கு முன்னர், மன்னர் குடும்பமும், நிலப்பிரபுக்களின் குடும்பங்களும் மட்டுமே சுதந்திரத்தை அனுபவித்து வந்தன. குடி மக்களுக்கு உரிமைகளே இருக்கவில்லை. அதனால், குடிமக்களுக்கான சுதந்திரத்தை நிலைநாட்ட வேண்டுமானால், அதற்கு சர்வாதிகாரம் இன்றியமையாதது என்று கருதப் பட்டது.
 
நமது காலத்தில், இன்றைய சமூகத்தில் வசதியான வாழ்க்கை வாழும், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், அரசு ஊழியர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், கைவினைஞர்கள், சிறு வணிகர்கள் போன்றோர் நடுத்தர வர்க்கம் (பிரெஞ்சு மொழியில்: பூர்ஷுவா வர்க்கம்) என்று அழைக்கப் படுகின்றனர். அவர்கள் ஏதோ ஒரு வகையில், நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள தெரிந்து வைத்துள்ளனர்.

புரட்சிக்கு முந்திய ஐரோப்பாவில், நடுத்தர வர்க்கத்தினர் வறுமையில் வாடினார்கள்.  நமது காலத்தில், நம் தாயகத்தில் ஆயுர்வேத மருத்துவர்களுக்கு இருக்கும் மதிப்பு கூட, அன்றிருந்த ஐரோப்பிய மருத்துவர்களுக்கு கிடைக்கவில்லை. வைத்தியம் பார்ப்பது ஒரு கீழ்த்தரமான, வருமானம் குறைவாகக் கிடைத்த தொழிலாகக் கருதப் பட்டது. ஏனையோரைப் பற்றி இங்கே சொல்லத் தேவையில்லை.

பிரெஞ்சுப் புரட்சியானது, மேற்குறிப்பிட்ட நடுத்தர வர்க்க (பூர்ஷுவா) மக்களின் ஆதரவில் தான் வெற்றி பெற்றது. நிலப்பிரபுக்களுக்கு எதிரான அவர்களது கோபம், அரச மட்டத்திலும் எதிரொலித்தது. சோவியத் யூனியனில், ஸ்டாலின் காலத்தில் பிரபுக்கள், முதலாளிய, மேட்டுக்குடி வர்க்கங்களை சேர்ந்த எல்லோரும் சந்தேகப் பட்டு கொல்லப் பட்டதும், சிறையில் அடைக்கப் பட்டதும் தெரிந்திருக்கும்.
 
பிரான்சிலும் அதே தான் நடந்தது. பிரபுக்கள், அவர்களின் குடும்பத்தினர் மட்டுமல்ல, பிரபு குலத்தில் பிறந்த அத்தனை பேரும் சந்தேகிக்கப் பட்டனர். கத்தோலிக்க மதகுருக்கள், மதத் தலைவர்கள் எல்லோரும் சந்தேகிக்கப் பட்டனர். புரட்சிப் படைகளின் கைகளில் அவர்கள் அகப்பட்டால் மரணம் நிச்சயம். யாருமே நீதி விசாரணைக்கு உட்படுத்தப் படவில்லை. கைது செய்யப் பட்டவர்கள் ஒன்றில் விடுதலை செய்யப் பட்டனர், அல்லது கொல்லப் பட்டனர்.
1793 ஆம் ஆண்டு, பிரெஞ்சுப் புரட்சியை பாதுகாப்பதற்காக “பொதுநல கமிட்டி” ஒன்று உருவாக்கப் பட்டது. பாரிசில் அதுவே “ஆளும் கட்சியாக” இருந்தது. முன்னாள் வழக்கறிஞரான ரொபெஸ்பியர் அதன் தலைவராக இருந்தார். உண்மையில் ரொபெஸ்பியரின் கையில் தான் அதிகாரம் குவிந்திருந்தது. பிரபுக்களினதும், கத்தோலிக்க மதத்தினதும் ஒடுக்குமுறையில் இருந்து, மக்களை விடுதலை செய்வதே தனது இலட்சியம் என்றவர், தானே ஒரு சர்வாதிகாரியாக நடந்து கொண்டார். அதனால் தான், புரட்சியாளர்களில் ஒரு பிரிவினரும் அவருக்கு எதிராக திரும்பினார்கள்.
 
ஸ்டாலின் காலத்தில், “மக்கள் விரோதிகள்” என்ற குற்றச்சாட்டின் பேரில் பலர் கைது செய்யப்பட்டனர் அல்லது கொல்லப் பட்டனர். பிரான்சில் ரொபெஸ்பியர் காலத்திலும் அதே தான் நடந்தது. அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள், ஒன்றில் “துரோகிகள்” அல்லது “மக்கள் விரோதிகள்” என்று முத்திரை குத்தப் பட்டார்கள். என்ன விலை கொடுத்தேனும் எதிர்ப்புரட்சியாளர்களிடம் இருந்து புரட்சியை பாதுகாக்க வேண்டும் என்பது ரொபெஸ்பியரின் குறிக்கோள்.
 
“ஒரு மக்கள் அரசு, தார்மீக ஒழுக்கத்தாலும், பயங்கரவாதத்தாலும் நிலைநிறுத்தப் படும். குறுகிய காலத்திற்குள் எழுந்து நிற்பதற்கு பயங்கரவாதம் நியாயப்படுத்தப் படலாம்…” என்பது ரொபெஸ்பியரின் வாதம். “நாங்கள் துரோகிகளை மட்டுமல்லாது, அவர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் அத்தனை பேரையும் தீர்த்துக் கட்டுவோம். வாள் மட்டுமே மக்களையும், அவர்களின் எதிரிகளையும் பிரித்து வைக்கும்….” இது 1793, செப்டம்பர் 5 அன்று ரொபெஸ்பியர் ஆற்றிய உரையில் இருந்து ஒரு பகுதி.
 
ரொபெஸ்பியரின் நம்பிக்கைக்குரிய கூட்டாளி ஜான் பால் மாராட் வெளியிட்ட “மக்களின் நண்பன்” (L’ Ami du Peuple) பத்திரிகை, பின்வருமாறு தலையங்கம் தீட்டியது: 
 
“துரோகிகளின் இரத்தத்தை ஆறாக ஓட வைப்போம். எமது நாட்டை மீட்பதற்கு அதுவே ஒரேயொரு வழி!”

ட்விட்டர் ஒளித்து வைத்திருக்கும் சுவாரசியங்கள்..!

ட்விட்டர் குருவியில் ஏறிப் பறந்து ட்விட் செய்யாதவர்களே இல்லை எனலாம். அந்த அளவிற்க்கு பயன்பாட்டாளர்களை கொண்டது ட்விட்டர்.

பேஸ்புக்குக்கு அடுத்த படியாக, அதிகம் பயன்படுத்தபடும் சமூகவலைத்தளமாக இருப்பினும், நமக்கு பேஸ் புக்கை பற்றித் தெரிந்த அளவு, ட்விட்டர் பற்றி தெரியாது என்றே கூற வேண்டும். இனி தெரிஞ்சுக்காம இருக்க வேண்டாம் வாங்க..

12-1434107436-01statusofjack.jpg

முதல் ட்விட்

முதல் ட்விட் செய்யப்பட்டது மார்ச் 21, 2006. செய்தவர் ட்விட்டரின் இணை நிறுவனர் ஜாக் டோர்சே.

12-1434107438-02libraryofcongress.jpg

ட்விட்டர் பதிவு

எல்லா ட்விட்களும், ட்விட்டர் சர்வார்களில் பதிவாகும், அதுபோலவே லைப்ரரி ஆஃப் காங்ரஸிலும் பதிவாகும்.

12-1434107440-03-500million.jpg

500 மில்லியன் ட்விட்ஸ்

ஒரு நாளைக்கு 500 மில்லியன் ட்விட்ஸ் செய்யப்படுகிறது.

12-1434107441-04-name.jpg

பெயர் பரிணாமம்

முதலில் இந்நிறுவனத்தின் பெயர் ஓடியோ, பின் ஸ்டேட்.அஸ் (stat.us) என்று மாறி பின் ட்விட்ட்ர் (twttr) என்றாகி, பின்தான் ட்விட்டர் என்றானது.

X5T5SIXS.png

ட்விட்டர் பறவை

ட்விட்டரின் லோகோவில் இருக்கும் பறவையின் பெயர் லேரி.

12-1434107444-06-tweetname.jpg

முதலில் ஸ்டேடஸ் அப்டேட்ஸ்

முதலில் ட்விட் என்ற வார்த்தை இப்போது தான் பயன்படுத்தப்படுகிறது, முதலில் ஸ்டேடஸ் அப்டேட்ஸ் என்றுதான் இருந்தது.

12-1434107446-07-pocky-cake.png

கின்னஸ் சாதனை

24 மணி நேரத்தில் போக்கி என்ற ஒரு நிறுவனத்தின் பெயரை அதிகமானோர் ட்விட்டரில் பயன்படுத்தியது, ஒரு கின்னஸ் சாதனையானது. பயன்படுத்தியோரின் எண்ணிக்கை 3,710,044.

12-1434107448-08-recordtweets.jpg

ட்விட்ஸ் அலை

ஒரு நொடியில் 143,199 ட்விட்ஸ் செய்யப்பட்டதே இதுவரையில் உள்ள ட்விட்டர் சாதனையாகும்.

12-1434107449-09-katy-perry-wallpaper.jp

ட்விட்டர் சாம்பியன்

கேட்டி பெர்ரி தான் தற்போதைய ட்விட்டர் சாம்பியன். இவரை 70,148,900 பேர் பின்தொடர்கின்றனர். இரண்டாம் இடத்தில் ஜஸ்டின் பைபர், மூன்றாம் இடத்தில் பராக் ஒபாமா.

12-1434107451-10-obama.jpg

1 மில்லியன் பேர்

ட்விட்டரில் இணைந்த 23 மணி நேரம் 22 நிமிடங்களில், 1 மில்லியன் பேரை பின் தொடர செய்தார் பராக் ஒபாமா. இது கின்னஸ் சாதனையாகிற்று.

ஃபேஸ்புக் - ப்ளாஷ்பேக்..!

பேங்க்ல அக்கவுண்ட் இருக்கோ இல்லயோ, தெரு ஓரத்துல இருக்குற டீக்கடையில அக்கவுண்ட் இருக்கோ இல்லயோ, எல்லோருக்கும் ஃபேஸ்புக்ல நிச்சயமா ஒரு அக்கவுண்ட் இருக்கும்..! 

13-1436796761-01.jpg

ஆரம்பம் 

2004 பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி, ஆரம்பிக்கும் போது இந்த வலைதளத்தின் பெயர் - திஃபேஸ்புக்..!


13-1436796774-12.jpg

5 பேர் :

மார்க் ஸுக்கர்பெர்க், டாஸ்டின் மோஸ்க்கோவிட்ஸ் மற்றும் மூன்று பல்கலைகழக நண்பர்கள் இணைந்து உருவாக்கியதே - ஃபேஸ்புக்..!

13-1436796809-spam-defrauded-facebook-us

பெயர் மாற்றம் :

மே 2005-இல் கல்லூரி மாணவர்களுக்கு மத்தியில் இது பயங்கரமாக பிரபலம் ஆன பின், ஃபேஸ்புக் என்று பெயர் மாற்றம் செய்தது..!

13-1436796762-02.jpg

பள்ளி மாணவர்கள் :

2005-ஆம் ஆண்டு செப்டம்பரில், பள்ளி மாணவர்கள் ஃபேஸ்புக்கை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர்..!

13-1436796763-03.jpg

நியூஸ் ஃபீட் அறிமுகம் :

2006-ஆம் ஆண்டில் 13 வயது நிரம்பியவர்கள் ஃபேஸ்புக்கை பயன்படுத்த வழிவகை உண்டானது. அதே ஆண்டு நியூஸ் ஃபீட் அறிமுகப்படுத்தப்பட்டது.!
 
13-1436796764-04.png

புதிய பேஜ் டிசைன் :

பின் 2007-ஆம் ஆண்டு ஃபேஸ்புக் தன் புத்தம் புதிய பேஜ் டிசைனை வெளியிட்டது..!

13-1436796766-05.jpg

ப்ரொஃபைல் பேஜ் :

2008-இல் புதிய ப்ரொஃபைல் பேஜ் உருவாக்கப்பட்டது. அதில் ஃபீட், வால், இன்ஃபோ, போட்டோஸ், பாக்ஸ்சஸ் போன்றவைகளும் அடக்கம்..!

13-1436796767-06.png

லைக் :

2009-ஆம் ஆண்டு லைக் பட்டன் அறிமுகம் செய்யப்பட்டது..!

13-1436796768-07.jpg

ப்ரைவசி செட்டிங் :

2010-ஆம் ஆண்டில் ப்ரைவசி செட்டிங்கில் மிக பெரிய தனிமனித கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது ஃபேஸ்புக்..!

13-1436796769-08.jpg

செக்-இன் :

அதே 2010-ஆம் ஆண்டில் செக்-இன் முறையையை அறிமுகம் செய்தது. இதன் மூலம் நீங்கள் எந்த ஊரில், எந்த நாட்டில் இருக்கிறீகள் என்று போஸ்ட் செய்யலாம்..!

13-1436796806-150708121136-facebook-veri

போட்டோ சேமிப்பு கிடங்கு :

2011-ஆம் ஆண்டில் ஃபேஸ்புக் 250 பில்லியன் போட்டோக்களால் நிரம்பி வழிந்தது...!

13-1436796807-150708121724-facebook-mess

மெஸ்ஸென்ஜர் :

மொபைல் போன் பயனாளிகளுக்காக 2011-ஆம் ஆண்டில், ஃபேஸ்புக் மெஸ்ஸென்ஜர் அறிமுகமானது..!

13-1436796770-09.jpg

டைம் லைன் :

டைம் லைனின் வரவு நிகழ்ந்தது 2012-ஆம் ஆண்டில் தான்..!

14-1436849079-120924105411-facebook-mobi

மொபைல் பயனாளிகள் :

2013-ஆம் ஆண்டில், 1.2 பில்லியன் ஃபேஸ்புக் பயனாளிகளில், 945 பில்லியன் பேர் மொபைல் மூலம் ஃபேஸ்புக்கை பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..!

14-1436849155-10.jpg

ஹாஷ்டாக் :

2013-ஆம் ஆண்டில் ஹாஷ்டாக் ஃபேஸ்புக்கில் அறிமுகமானது..!

14-1436849088-twitter1-570x325.jpg

ட்விட்டர் : 2007-இல் இருந்தே ட்விட்டர் 'ஹாஷ்டாக்'கை பயன்பாட்டில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது..!

14-1436849199-11.jpg

வீடியோ :

2015-ஆம் ஆண்டு முதல் ஃபேஸ்புக் வீடியோக்களை போஸ்ட் செய்ய வழி வகுத்தது..!

14-1436849081-140130191208-facebook-ligh

உலக மயம் :

2013-ஆம் ஆண்டிலேயே ஃபேஸ்புக் உலகம் முழுதும் பரவி இருந்தது குறிப்பிடத்தக்கது..!

2021 இப்படி தான் இருக்கும்..!?

உலக மக்களை வியப்பில் ஆழ்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் தொழில்நுட்ப துறை எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதை விளக்கும்  தொகுப்பு தான் இது.

தொழில்துறையில் ஏற்படும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு வாக்கில் மக்கள் பயன்பாட்டிற்கு எதிர்பார்க்கப்படும் தொழில்நுட்ப கருவிகளின் பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்...

tooopen_sy_130269757698.jpg

2016 விண்வெளி சுற்றுலா

இன்றைய காலக்கட்டத்தில் விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகின்றது. ஸ்பேஸ் ஐலேண்டு, கேலக்டிக் சூட் மற்றும் ஆர்பிட்டல் டெக்னாலஜீஸ் போன்ற நிறுவனங்கள் எதிர்காலத்தில் விண்வெளி சுற்றுலாவை சாத்தியமாக்குவதோடு, ஐந்து நாட்களுக்கு சுமார் $1 மில்லியன் வரை கட்டணம் நிர்ணயிக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

07-1446878553-02.jpg

சன்ஸ்கிரீன் மாத்திரை
அல்ட்ரா வைலட் கதிர்களில் இருந்து மனித தோல் மற்றும் கண்களை பாதுகாக்கும் சன்ஸ்கிரீன் மாத்திரைகள் அடுத்த ஆண்டு வாக்கில் சாத்தியமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

07-1446878555-03.jpg

2017 லேசர் பேனா

உடலில் ஏற்படும் காயங்களை சரி செய்யும் லேசர் பேனா வகைகள் விரைவில் சாத்தியமாகும் என்பதோடு இதன் மூலம் ரத்தம் கசிவதை விரைவில் தடுக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

07-1446878556-04.jpg

2018 லைட் பீக்

ஒரு நொடியில் சுமார் 100 ஜிபி டேட்டாகளை பறிமாற்றம் செய்யும் வழி முறை தான் டைல் பீக்.

07-1446878558-05.jpg

ரோபோட் உளவாளி

பூச்சி வடிவில் இருக்கும் ரோபோட் உளவாளிகள் எதிர்காலத்தில் மிகவும் சாதாரணமான தொழில்நுட்பங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

07-1446878559-06.jpg

2019 கணினி

இதற்கு முன் இல்லாத அளவு மனித மூளைக்கு சமமான கணினி வகைகள் வாடிக்கையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். இதன் பயன்பாடுகள் தற்சமயம் இருப்பதை விட அதிக மேம்படுத்தப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

07-1446878561-07.jpg

வெப் 3.0

முற்றிலும் ஹைப்பர்லின்க்கள் சார்ந்த வெப் 1.0, சமூகம் சார்ந்த தகவல் பறிமாற்றம் வெப் 2.0 தற்சமயம் பயன்பாட்டில் இருக்கின்றது. எதிர்காலத்தில் வெப் 3.0 வாடிக்கையாளர்களை சமூகம் சார்ந்த தகவல்களை அதிகம் மேம்படுத்தப்பட்ட, தனித்துவம் வாய்ந்த அல்காரிதம் போன்றவைகளை கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது.

07-1446878563-08.jpg

பியுஷன் ரியாக்டர்

மிகவும் சிறிய அளவு மூலபொருட்களை கொண்டு அதீத சக்தியை உருவாக்குவதே பியுஷன் ரியாக்டர் ஆகும். இதற்கான ஆய்வுகள் ஏற்கனவே துவங்கியிருந்தாலும் இவை முழுமையாக நிறைவடைய 2030 வரை காத்திருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

07-1446878564-09.jpg

2020 கார்

வால்வோ நிறுவனம் உறுதியளித்திருக்கும் க்ராஷ்-ப்ரூஃப் கார்கள் 2020 ஆம் ஆண்டு வாக்கில் சாத்தியமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வகை தொழில்நுட்பமானது ரேடார், சோனார் மற்றும் டிரைவர் அலெர்ட் சிஸ்டம் போன்றவைகளை கொண்டு சாத்தியமாக்கப்படலாம் என கூறப்படுகின்றது.

07-1446878566-10.jpg

எதிர்பார்ப்பு

எதிர்கால தொழில்நுட்பங்களும் மக்கள் நலன் சாந்தே இருக்கும் என முந்தைய ஸ்லைடர்களின் மூலம் புரிந்து கொண்டிருப்பீர்கள். இதே போல் தொழில்நுட்ப துறையில் எவ்வாறான வளர்ச்சிகளை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்.

Sunday 15 November 2015

இந்த நூற்றாண்டின் தொழில்நுட்ப தோல்விகள்..!!

தொழில்நுட்ப சந்தையில் வெளியாகும் அனைத்து கருவிகளும் வெற்றி பெற வேண்டும் என எவ்வித அவசியமும் கிடையாது. ஒரு கருவி வெற்றி பெற அதன் பின் நிறைய காரணங்களும் அதற்கான தேவை மக்கள் மத்தியில் இருத்தல் மிகவும் அவசியமாகும்.

தொழில்நுட்ப வளர்ச்சியின் வரலாற்றில் பல கருவிகள் வெற்றி பெற்றுள்ளன, இதே போல் பல கருவிகள் மக்களுக்கு தெரியாமலே தோல்வியையும் தழுவியிருக்கின்றன. அந்த வகையில் மக்களுக்கு தெரிந்திராத மிகப்பெரிய தொழில்நுட்ப தோல்விகள் எவை என்பதை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

05-1446727226-01.jpg

3காம் எர்கோ ஆட்ரீ

2001 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட ஆட்ரீ மின்னஞ்சல்களை அனுப்புவது, இண்டர்நெட் ப்ரவுசிங் மேற்கொள்ளும் இந்த கருவி வெளியான சில காலத்திலேயே விற்பனை கைவிடப்பட்டது.

05-1446727227-02.jpg

தி செக்வே

2001 ஆம் ஆண்டு வெளியான இந்த கருவியும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என்றே கூற வேண்டும். மிக குறைந்த விற்பனை காரணமாக இந்த கருவியும் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

05-1446727229-03.jpg

மைக்ரோசாப்ட் ஸ்பாட் வாட்ச்

2004 ஆம் ஆண்டு வெளியான ஸ்மார்ட் பெர்சனல் ஆப்ஜக்ட்ஸ் டெக்னாலஜி ( Smart Personal Objects Technology) தான் ஸ்பாட் (SPOT). இந்த ஸ்மார்ட்வாட்ச் கருவியானது எஃப்எம் ரேடியோ சிக்னல், வானிலை, ஜிபிஎஸ் போன்ற சேவைகளை வழங்கியது, என்றாலும் இவை மக்கள் பயன்பாட்டிற்கு உகந்ததாக இல்லாமலேயே தோல்வியை தழுவியது.

05-1446727230-04.jpg

நோக்கியா என்-கேஜ்

கேமிங் மற்றும் மொபைல் போன் என இரு வித பயன்பாடுகளை வழங்கும் வகையில் வடிமைக்கப்பட்டாலும் மோசமான கேம், மற்றும் பயனற்ற பட்டன்கள் போன்றவை இந்த கருவியின் தோல்விக்கு காரணமாக கூறப்படுகின்றது.

05-1446727231-05.jpg

கிஸ்மோடோ டைகர்

டெலிமேடிக்ஸ் நிறுவனம் 2005 ஆம் ஆண்டு வெளியிட்ட இந்த கருவி சோனி மற்றும் நின்டென்டோ போன்ற நிறுவனங்களுடன் நேரடி போட்டியை ஏற்படுத்த நினைத்து மிகப்பெரும் தோல்வியை தழுவியது. இந்த கருவிகள் உலகம் முழுக்க 25,000 யுனிட்களுக்கும் குறைவாகவே விற்பனை செய்யப்பட்டன.

05-1446727233-06.jpg

தி ஸூன்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபாட் கருவிகளுக்கு போட்டியாக வெளியிடப்பட்ட ஸூன் சந்தையில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

05-1446727234-07.jpg

மைக்ரோசாப்ட் கின்

ஐபோன் மற்றும் ஆண்டிராய்டுகளுக்கு போட்டியாக வெளியான மைக்ரோசாப்ட் நிறுவனத்திந் கின் சந்தையில் சுமார் 72 நாட்கள் மட்டுமே நிலைக்க முடிந்தது.

05-1446727236-08.jpg

ஔயா

ஆண்ட்ராய்டு சார்ந்த கேமிங் சிஸ்டம் தான் ஔயா. அதிகம் எதிர்பார்க்கப்பட்டாலும் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

05-1446727237-09.jpg

அமேசான் ஃபயர் போன்

அதிக விலையில் வெளியிடப்பட்ட இந்த கருவியானது ஐபோன் மற்றும் சாம்சங் கேலக்ஸி கருவிகளுக்கு போட்டியாக வெளியிடப்பட்டது. இருந்தும் மோசமான பேட்டரி, இன்டர்ஃபேஸ் என பல்வேறு கோளாறுகளின் காரணமாக தோல்வியடைந்தது.

05-1446727238-10.jpg

கூகுள் கிளாஸ்

கூகுள் நிறுவனத்தின் கிளாஸ் கருவியும் சந்தையில் தோல்வியை தழுவியது என்றே கூற வேண்டும். குதர்க்கமான வாய்ஸ் கமான்டு, செய்கைகளினால் இந்த கருவி தோல்வியை தழுவியதாக கூறப்படுகின்றது.

நாம் பயன்படுத்தும் பல்வேறு தொழில்நுட்பங்களுக்கு பின் மறைக்கப்பட்ட வரலாறுகள்

தொழில்நுட்ப யுகத்தில் இன்று நாம் பயன்படுத்தும் பல்வேறு அதி நவீன தொழில்நுட்பங்களுக்கு பின் மறைக்கப்பட்ட பல வரலாறுகள் இருக்கின்றன. இது போன்று மறைக்கப்பட்ட வரலாறுகளினால் இன்று கண்டுபிடிக்கப்பட்டதாக கருதப்படும் பல்வேறு தொழில்நுட்ப சேவைகளின் தோற்றம் குறித்த பல திடுக்கிடும் தகவல்களும் மக்களுக்கு தெரியமாலே இருக்கின்றது.

அந்த வகையில் மக்களுக்கு தெரிய கூடாது என மக்களிடம் இருந்து மறைக்கப்பட்ட இன்றை தொழில்நுட்பங்களின் ஆதிகால கண்டுபிடிப்புகள் சார்ந்த தகவல்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

12-1447311373-01.jpg
ர்ந்த எஃப்.ஏ. முல்லர் ஆவார், இவர் 1887 ஆம் ஆண்டு இதை கண்டறிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

12-1447311378-03.jpg

காண்டாக்ட் லென்ஸ்

எஃப்.ஏ முல்லர் தான் காண்டாக்ட் லென்ஸ்களை முதலில் கண்டறிந்தார் என கூறப்பட்டாலும் ஸ்விஸ் நாட்டை சேர்ந்த அடால்ஃப் ஈ.ஃபிக் மற்றும் பாரிஸ் ஆப்டிஷியனான எடௌர்டு கால்ட் இணைந்து 1888 ஆம் ஆண்டு காண்டாக்ட் லென்ஸ்களை கண்டறிந்தனர் என்றும் கூறப்படுகின்றது.

12-1447311381-04.jpg

சமூக வலைதளம்

இன்று சமூக வலைதளங்களை பிரபலப்படுத்தியது மார்க் சூக்கர்பர்க் தான் என நினைத்து கொண்டிருப்போருக்கு இந்த தகவல் சற்றே ஆச்சர்யத்தை ஏற்படுத்தும்.

12-1447311385-05.jpg

நெதர்லாந்து

1560களில் இன்று நெதர்லாந்து மற்றும் ரைன்லாந்து என அழைக்கப்படும் பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் கல்வியை பயில உலகம் முழுக்க பயணித்தனர், இவ்வாறு பயணம் செய்வோர் தங்களுக்கு பிடித்தமானவர்கள் சார்ந்த தகவல்களை ஆங்காங்கே குறித்து வைப்பர், சில சமயங்களில் அவர்கள் சார்ந்த வரைபடங்களையும் படமாக்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

12-1447312749-06.jpg

தொலைபேசி

உலகின் முதல் தொலைபேசியை கிரஹாம் பெல் கண்டறிந்தார் என்ற செய்தி முற்றிலும் தவறு என கூறப்பட்டு வருகின்றது. உண்மையில் தொலைபேசியை கண்டறிந்தவர் யார் என்பது இன்று வரை குதர்க்கமான விஷயமாகவே இருக்கின்றது எனலாம்..

12-1447312750-07.jpg

தொலைபேசி

உண்மையில் தொலைபேசி கருவியானது 1200 ஆண்டுகளுக்கு முன் கண்டறியப்பட்டது என்றும் இந்த கருவி சிமு நாகரீகத்தை சேர்ந்தவர்களால் கண்டறியப்பட்டது என கூறப்படுகின்றது.

12-1447312752-08.jpg

ஆதாரம்

சிமு நாகரீகத்தை சேர்ந்தவர்கள் கண்டறிந்த தொலைபேசியானது அமெரிக்க இந்திய தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருப்பதாகவும் இதனை கண்டறிந்தது பாரோன் வால்ராம் வி. வான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

12-1447312759-09.jpg

தொலைபேசி

மேலும் சிமு நாகரீகத்தினர் கண்டறிந்த தொலைபேசியில் 9 செ.மீ நாளம் கொண்ட இரு ரிசீவர்கள் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

12-1447314795-10.jpg

வாகனம்

நீராவி மூலம் இயங்கும் உலகின் முதல் வாகனத்தை கண்டறிந்தவர் நிகோலஸ் ஜோசப் கஃனட் ஆவர், இவர் இந்த வாகனத்தை 1769 ஆம் ஆண்டு கண்டறிந்தார் என்பதோடு இந்த வாகனம் மணிக்கு 3 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

12-1447314797-11.jpg

நீர்மூழ்கி கப்பல்

முதல் உலக போரின் போது கண்டறியப்பட்டதாக கருதப்படும் நீர்மூழ்கி கப்பல்கள் வில்லியம் போர்ன் என்பவரால் 1580களில் கட்டமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

12-1447314798-12.jpg

பயன்பாடு

எனினும் 1890களில் ஜான் பி. ஹாலாந்து மற்றும் சைமன் லேக் முறையே அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்காக கண்டறிந்தனர்.

12-1447314799-13.jpg

குறுந்தகவல்

இன்று பெரும்பாலான இளைஞர்கள் குறுந்தகவல்களில் பயன்படுத்தும் சுருக்கெழுத்து முறையானது 1890களில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

12-1447314801-14.jpg

ஆப்பிள் 1

உலகெங்கும் ஆப்பிள் 1 கம்ப்யூட்டரை கண்டறிந்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ் என்றே நினைத்திருக்கின்றனர், ஆனால் ஆப்பிள் 1 கம்ப்யூட்டரை கண்டறிந்தது ஸ்டீவ் வோஸ்நியாக் என்பது பலரும் அறிந்திராத விஷயமாகவே இருக்கின்றது.