Sunday 31 March 2019

எச்சரிக்கை: பூமியோடு சேர்த்து மனித குலத்தை அழிக்க போகும் 5ஜி தொழில்நுட்பம்.!





மைக்ரோவேவ் கதிர்வீச்சு


யாரேனும் உங்களிடம் மைக்ரோவேவ் அடுப்புகளில் எப்படி உணவு சமைக்கப்படுகிறதென்று கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்? நம்மில் பலருக்கும் இதற்கான பதில் மைக்ரோவேவ் கதிர்வீச்சு அலைகள் என்பது தெரியும். நம்மில் இன்னும் எத்தனை பெயருக்குத் தெரியும் இதே கதிர் வீச்சுதான் 4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படுகிறதென்று.

மனதைத் திடப்படுத்திக்கொள்ளுங்கள்


இதைக் கேட்டவுடன் உங்கள் மனம் சற்று பதறி இருக்கும். மனதைத் திடப்படுத்திக்கொள்ளுங்கள், அடுத்தபடியாக சொல்ல போகும் விஷயங்களைக் கேட்டால் உங்கள் மனம் கொந்தளிக்கலாம், நம் இனத்தின் நிலை இதுவா என்ற கவலை எண்ணம் தோன்றலாம்.

வெந்து வெடித்துவிடும் நிலை தான் பூமிக்கும்


மைக்ரோவேவ் அடுப்பில் ஒரு முட்டையை வைத்தால், 30 நொடியில் முட்டை வெந்து வெடித்துவிடும். மைக்ரோவேவ் அலை வீச்சின் சக்தி அத்தகையது. அதேபோல் தற்பொழுது பூமிக்கும் இதே நிலை தான் என்பதே உண்மை, புரியாதவர்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம்.

புதிய 5ஜி தொழில்நுட்பம்


5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தப் பல முன்னை நிறுவனங்கள் போட்டியிட்டுக் கொண்டிருக்கிறது. இந்த புதிய 5ஜி தொழில்நுட்பத்தினால் என்ன என்ன நன்மைகள் என்று பலருக்கும் தெரியும், உங்களின் மொபைல் நெட்வொர்க் வேகமாக இருக்கும், வீடியோகளை உடனுக்குடன் டவுன்லோட் செய்து பார்த்துக்கொள்ள முடியும் என்பதே நாம் பார்க்கும் சில நல்ல விஷயங்கள்.

இதற்குப் பின்னல் இருக்கும் ஆபத்து


ஆனால் இதற்குப் பின்னல் இருக்கும் ஆபத்தை, பலரும் கூற மறுத்துவிட்டனர். உலக மக்கள் பற்றி கவலை உள்ள சிலரும், பூமியின் காதலர்கள் என்று கூறப்படும் சில விஞ்ஞானிகள் மட்டும், இந்த 5ஜி திட்டத்தை எதிர்த்து தங்களின் கருத்துக்களையும், இதற்குப் பின்னல் உள்ள பேர் ஆபத்தையும் தெரிவித்துப் போராடி வருகின்றனர்.

20,000 சாட்டிலைட்கள்


இந்த 5ஜி தொழில்நுட்பம் வெற்றிகரமாகக் களமிறக்க, பூமியைச் சுற்றி பூமியின் சுற்றுப்பாதையில் சுமார் 20,000 சாட்டிலைட்கள் அமைக்கப்பட வேண்டும். இந்த 20,000 சாட்டிலைட்களும் பூமியை நோக்கி மைக்ரோவேவ் சிக்னலை தாக்க போகிறது.

பூமியின் இயல்பு நிலை மாறும் அபாயம்


இந்த மைக்ரோவேவ் சிக்னல்கள் பூமியைத் தாக்குவதுமட்டுமின்றி, பூமியின் இயல்பு நிலையையும் மாற்றுகிறது. உண்மையில் சொல்லப்போனால் மைக்ரோவேவ் சிக்னல்கலால் பூமி சூடடைந்து, பெருமளவிலான வானிலை மாற்றத்தைச் உருவாக்க போகிறது. அதுமட்டுமின்றி அதிகளவிலான இயற்கை சீற்றத்தை பூமி சந்திக்க நேரிடும்.

மனித இனத்தோடு பூமியை அழிக்கும் 5ஜி


அதைவிடக் கொடூரமான ஆபத்து, மைக்ரோவேவ் சிக்னல்கள் பூமியில் உள்ள மக்கள் இனத்தையும், பூமியில் வாழும் ஜீவராசிகளையும் நாளுக்கு நாள் வேகமாக வேகவைத்து அழித்துவிடும் என்பதே உண்மை. மனிதர்கள், பறவைகள், மிருகங்கள் மற்றும் தாவிரங்கள் என்று அனைத்தையும் அழித்துவிடும்.

5ஜி தொழில்நுட்பத்திற்குத் தடை


முன்பு சொன்னதுபோல் மைக்ரோவேவ் அடுப்பில் வைத்த முட்டை எப்படி வெந்து வெடித்துவிடுமோ, அதே நிலை தான் தற்பொழுது பூமிக்கும். இந்த நிலையைப் பூமி மற்றும் பூமியில் உள்ள மக்கள் இனம் சந்திக்க வேண்டாம் என்பதற்காகப் பல விஞ்ஞானிகள் 5ஜி தொழில்நுட்பத்திற்குத் தடை வாங்க முயற்சித்து வருகின்றனர்.

அழிவை நோக்கி


ஆனால் இன்னும் சிலர், என்ன ஆபத்து நேரும் என்று தெரிந்தே மக்கள் இனத்தை வேகமாக அழிவை நோக்கி அழைத்துச் செல்வதற்கு மும்முரமாக வேலைபார்த்து வருகின்றனர்.

சற்று சிந்தியுங்கள்


5ஜி தொழில்நுட்பத்தின் தேவை கட்டாயமானது அல்ல, ஆனால் நம்முடைய வாழ்வியல் கட்டாயமானது. நம்மை வேக வைத்து பூமியை வெடிக்க வைக்கும் 5ஜி தொழில்நுட்பம் தேவைதானா என்று நீங்களும் சற்று சிந்தியுங்கள்.

No comments:

Post a Comment